நிருதர் தீவினை அன்றோ - அரக்கர் இழைத்த பாவத்தின் வடிவம் அன்றோ?' தானும் அறியான், சொல் புத்தியும் கேளான் என இராவணனை இகழ்ந்தான் மாரீசன். இராமன் போருக்கு மாலை சூடு முன்பே பகைவர் உயிரிழப்பர் என அவன் ஆற்றலின் மிகுதி கூறினான். கோதை - மாலை. இங்கே அதிரப் பொருவதற்கு அடையாளமாகிய தும்பைப் பூ மாலை.23 | 3260. | ' "உஞ்சு பிழையாய் உறவினோடும்" என உன்னா, நெஞ்சு பறைபோதும்; அது நீ நினையகில்லாய்; அஞ்சும் எனது ஆர் உயிர்; அறிந்து அருகு நின்றார், நஞ்சு நுகர்வாரை, "இது நன்று" எனலும் நன்றோ? |
"உஞ்சு பிழையாய் உறவினோடும் - உன் உறவினரோடு நீயும் தப்ப முடியாது; என உன்னா - என்று எண்ணும் அளவில்; நெஞ்சு பறை போதும் - நெஞ்சம் பறை கொட்டி அறிவிக்கும் நிலையில்; எனது ஆருயிர் அஞ்சும் - என்அரிய உயிர் பதைக்கின்றது; அது நீ நினையகில்லாய் - நீ அதனைக் கருத்தில் எண்ணாதிருந்தாய்; நஞ்சு நுகர்வாரை - விடம் அருந்துகின்றவர்களை; அறிந்து அருகு நின்றார் - அறிந்து பக்கத்தில் நின்றோர்; இது நன்று - உங்கள் செயல் நன்று; எனலும் நன்றோ - என்று கூறுதலும் நல்ல செயலாகுமா?" நீ நஞ்சு அருந்துவது போல் தீமை செய்யக் கருதுகையில், அதனை அறிந்த நான் நன்று எனப் பாராட்டல் சரியாகுமா எனக் கேட்டான் மாரீசன் நினைகில்லாய் - எண்ணும் ஆற்றல் இல்லாதவனாயினாய். (இல் - ஆற்றலை உணர்த்த வரும் இடைச்சொல்.) 24 | 3261. | 'ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும், மற்றைத் தேசம் முதல் முற்றும், ஓர் இமைப்பின் உயிர் தின்ப- கோசிகன் அளித்த கடவுட் படை, கொதிப்போடு ஆசு இல, கணிப்பு இல, இராமன் அருள் நிற்ப, |
ஈசன் முதல் மற்றும் இமையோர் உலகும் - சிவபெருமான் முதல் தேவர் உலகு வரை; மற்றைத் தேசம் முதல் முற்றும் - வேறு பகுதிகளையும் |