| முக் காலின் முடிந்திடுவான் முயல்வான் புக்கான், அவ் இராகவன் வைகு புனம். |
வேள்வியின் அன்று - (விசுவாமித்திரர் செய்த) யாகம் நிகழ்ந்த போதும்; அக்காலமும் - தண்ட காரண்யத்தில் மானாகச் சென்ற அப்போதும்; நலிந்தும் - துன்புற நேர்ந்தும்; தொடர்ந்து இக்காலும் - இன்று வரை தொடர்ச்சியாக; ஓர் ஈறு பெறான் - ஒரு முடிவையோ மரணத்தையோ பெறாத (மாரீசன்); முக்காலின் - இப்போது மூன்றாம் முறையாக; முடிந்திடுவான் முயல்வான் - மரணமுற இசைந்து அதன் வழியே செல்கின்றவனாய்; அவ் இராகவன் வைகு புனம் - அந்த இராமபிரான் தங்கியுள்ள வனம் நோக்கி; புக்கான் - சென்றடைந்தான். மூன்றாம் முறை மரணம் உறுதியென அறிந்து அதனைச் சந்திக்க சென்றான் மாரீசன். 42 மாயப் பொன் மானாய் மாரீசன் தோன்றுதல் 3279. | தன் மானம் இலாத, தயங்கு ஒளி சால் மின் வானமும் மண்ணும் விளங்குவது ஓர் பொன் மான் உருவம் கொடு போயினனால்- நன் மான் அனையாள்தனை நாடுறுவான். |
தன் மானம் இலாத - தனக்கு நிகர் இல்லாத; தயங்கு ஒளி சால் - அசைகின்ற ஒளி பொருந்திய; மின் - உடல் மின்னுதலால்; வானமும் மண்ணும் விளங்குவது ஓர் - விண்ணும் மண்ணும் விளக்கமுறும் படியான ஒரு; பொன் மான் உருவம் - தங்க மானின் வடிவம்; கொடு போயினன்- எடுத்துக் கொண்டு மாரீசன் சென்றான்; நன்மான் அனையாள் தனை - உயர்ந்த மான் போன்ற சீதையினை; நாடுறுவான் - தேடிச் சென்று அடைந்தான்; ஆல் - அசை. மாயமான் கண்டாரைக் கவரும் ஒளிமிக்கதாய் விளங்கியது. தனை நாடுறுவான் என்பதற்குச் சீதை தன்னை நாடும்படியாகச் சென்றான் எனவும் பொருள் கூறுவர். 43 3280. | கலைமான் முதல் ஆயின கண்ட எலாம், |
|