பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 495

இவ்வாறு கூறினார். கொய்யா மலர் மலர் கொய்தது எனக் கவிதையழகு
மிளிர முரண் அணியுடன் கூறினார். மூன்றாம் வரியில் 'வய்தேவி' என
ஓசை எழுதலால் எதுகை பிழையாதாயிற்று.                        45

3282. உண்டாகிய கேடு
     உடையார், துயில்வாய்
எண் தானும் இயைந்து
     இயையா உருவம்
கண்டார் எனலாம்
     வகை, கண்டனளால்-
பண்டு ஆரும் உறா
     இடர்பாடுறுவாள்.

    உண்டாகிய கேடு உடையார் - நிச்சயம் அழிவு நேரும் என்ற
நிலையில் உள்ளார்; துயில்வாய் - உறக்கம் கொள்ளுகையில்; எண் தானும்
இயைந்து இயையா உருவம் -
எண்ணத்தில் ஒரு போதும் இசைந்திராத
விசித்திர வடிவங்களை; கண்டார் எனலாம் வகை - கனவிற் கண்டார்கள்
என்று கூறத்தக்க முறையில்; பண்டு ஆரும் உறா இடர் - எக்காலத்தும்
முன்பு எவரும் படாத துயரம்; பாடு உறுவாள் - பட இருக்கின்றவளான
சீதை; கண்டனள் - மாய மானைக் கண்டாள்; (ஆல் - அசை)

     துன்பம் வருமுன் கனவு போன்ற முன் சகுனங்கள் தோன்றினாற்
போலச் சீதை முன் பொன்மான் விபரீதம் விளைவிக்கத் தோன்றியது.46

3283.காணா இது, கைதவம்
     என்று உணராள்;
பேணாத நலம்
     கொடு பேணினளால்-
வாழ்நாள் அவ்
     இராவணன் மாளுதலால்,
வீழ் நாள் இல் அறம்
     புவி மேவுதலால்.

    அவ் இராவணன் வாழ்நாள் - அந்த இராவணனின் ஆயுட் காலம்;
மாளுதலால் - முடிய இருப்பதனாலும்; வீழ் நாளில் - அவன்
மரணமுறுகிற நாளில்; அறம் புவி மேவுதலால் - தருமம் பூமியில் செழிக்க
இருப்பதனாலும்; (சீதை); காணா - பொன்மானைக் கண்டு; 'இது கைதவம்'
என்று உணராள் -
'இது வஞ்சனை வேடம்' என்று உணராதவள் ஆனாள்;
பேணாத - ஆதரித்தற்கு ஒவ்வாத; நலம் கொடு பேணினள் - அழகில்
ஆர்வம் கொண்டு (மாயமானை) விரும்பி நின்றாள். (ஆல் - அசை)