பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 497

     அம் மான் வேண்டுமென வாயால் கூறாது உணர்த்திக் காட்டினாள். 49

3286.'இம் மான் இந் நிலத்தினில்
     இல்லை' எனா,
எம்மான் இதனைச் சிறிது
     எண்ணல் செயான்,
செம் மானவள் சொல்கொடு,
     தே மலரோன்
அம்மானும், அருத்
     தியன் ஆயினனால்.

    'இம் மான் - இது போன்றதொரு மான்; இந் நிலத்தினில் இல்லை -
இந்த உலகத்தில் இதுவரை இருந்ததில்லை; எனா - என்று ஆராய்ந்து;
எம்மான் - எம் தலைவனும்; தேமலரோன் அம்மானும் - பிரமனது
தந்தையுமாகிய இராமபிரான்; இதனைச் சிறிது எண்ணல் செயான் -
இவ்வாறு சற்றும் சிந்தியாதவனாய்; செம்மான் அவள் - செம்மை நிரம்பிய
மான் போன்ற சீதையின்; சொல் கொடு - ஆசைச் சொற்களை ஏற்று;
அருத்தியன் ஆயினன் - தானும் (மானின்மேல்) விருப்பம் கொண்டான்;
ஆல் - ஈற்றசை.

     எல்லாவற்றையும் படைக்கும் பிரமனின் தந்தையான இராமனுக்கு, இம்
மாயமான் போன்றதொரு படைப்பு இயற்கையில்லை என்ற ஆராய்ச்சி
ஏற்படவில்லை.                                              50

இலக்குவன் 'அது மாயமான்' எனல்

3287. ஆண்டு, அங்கு,
     இளையான் உரையாடினனால்,
'வேண்டும் எனலாம் விழைவு
     அன்று இது' எனா;
'பூண் துஞ்சு பொலங்
     கொடியோய்! அது நாம
காண்டும்' எனும் வள்ளல்
     கருத்து உணர்வான்.

    வேண்டும் எனலாம் - சீதை விரும்பிக் கேட்கின்ற தன்மையினால்;
விழைவு அன்று இது - பொருத்தமான ஆசை அன்று இது; எனா! -
என்று கூறாது; 'பூண் துஞ்சு பொலங் கொடியோய் - அணிகலன்கள்
அழகுடன் பொருந்தும் பொற்கொடி போன்றவளே!; அது நாம் காண்டும் -
அந்த மானைக் காணலாம்; எனும் வள்ளல் கருத்து உணர்வான் - என்று
கூறும் இராமனுடைய சிந்தனைப் போக்கை உணர்ந்தவனாய்; இளையான் -
தம்பியாகிய இலக்குவன்; ஆண்டு அங்கு உரையாடினன் - அப்போது