பக்கம் எண் :

50ஆரணிய காண்டம்

 சென்றான், எதிர்கொண்டு;
     சிறப்பு அமையா,
'என்தான் இவண்
     எய்தியவாறு?' எனலும்,
பொன்றாத பொலங் கழ
     லோன் புகலும்;

    நின்றான் - (இந்திரன் அச் சரபங்கர் ஆசிரமத்தில்) சென்று நின்றான்;
எதிர் நின்ற நெடுந்தவனும்எதிர் கொண்டு சென்றான் - அங்கு அவன்
எதிரில் நின்ற பெருந்தவம் செய்தவனாகியசரபங்கனும் எதிர் வந்து
அழைத்துச் சென்றான்; சிறப்பு அமையா - வந்த அதிதிக்குரியஉபசாரங்கள்
செய்து; 'இவண் எய்தியவாறு என்' எனலும் - இங்கு நீ வந்த காரணம்
யாது' எனக் கேட்டலும்; பொன்றாத பொலங் கழலோன் புகலும்- கெடாத
பொற்கழல் அணிந்தஇந்திரன் பின்வருமாறு கூறினான்; தான் - அசை.

     நின்ற நெடுந்தவன் என்பதற்கு நிலைபெற்று நெடிய தவம் செய்த
சரபங்க முனிவன் எனலுமாம்.இந்திரன் பெற்ற பல வெற்றிகளைக் குறிக்கும்
பொலங்கழல் அணிந்த நிலை.                                   14

இந்திரன் பிரம லோகத்திற்கு அழைத்தலும் முனி மறுத்தலும்

2601."நின்னால் இயல் நீதி நெடுந்
     தவம், இன்று,
என்னானும் விளம்ப அரிது"
     என்று உணர்வான்
அந் நான்முகன்,
     நின்னை அழைத்தனனால்;
பொன் ஆர் சடை
     மாதவ! போதுதியால்;

    பொன் ஆர் சடை மாதவ - பொன்னிறம் பொருந்திய சடையுடைய
பெரும் தவத்தோனே; நின்னால் இயல் நீதி நெடுந்தவம் -உம்மால்
செய்யப்பெற்ற முறை தவறாத பெருந்தவம்; என்னானும் விளம்ப அரிது
என்றுஉணர்வான் -
எவ்வகையாலும் எடுத்துக் கூறுவதற்கு அரியது என்று
உணர்ந்தவனாகி; அந்நான்முகன் நின்னை அழைத்தனனால் - அந்த
நான்கு முகமுடைய பிரமதேவன் உம்மைத் தம்உலகிற்கு வர அழைத்தனன்
ஆதலின்; இன்று போதுதி - இப்பொழுது அங்குப்போகஎழுந்தருள்வீராக;
ஆல் - அசை.

     என்னால் கூடக் கூற இயலாது என்ற கூற்றை இந்திரன் கூற்றாகவும்
கொள்ளலாம். இந்திரன்ஐந்திரம் எனும் இலக்கணம் இயற்றிய அறிஞன். அத்