'முறையும் முடிவும் - இப்படித்தான் இருக்க வேண்டுமென்னும் முறையும் முடிவும்'; மொய் உயிர் - உலகத்தில் தோன்றிய உயிர்களுக்கு; இலை - கட்டுத்திட்டம் ஒன்றும் கிடையாது'; என்று - என; இறைவன் - தலைவனாகிய இராமன்; இளையானொடு இயம்பினன் - தம்பியிடம் கூறினான்; ஏழை - (இதனிடையே) சீதையோ; 'பறையும் துணை - இவ்வாறு பேசி்க் கொண்டிருக்கிற நேரத்திற்குள்ளாக; அன்னது - அப்பொன் மான்; பல்நெறி போய் மறையும் - காட்டு வழிகள் பலவற்றுள்ளும் சென்று மறைந்து விடுமே'; என வருந்தினள் - எனப் (பேதமையால்) வருந்தலானாள். (ஆல் - அசை) அறியாமை சீதைக்கு ஏற்பட்டிருப்பதால் ஏழை என்றார். 55 இராமன் சீதையோடு சென்று மானைக் காணுதல் அறுசீர் ஆசிரிய விருத்தம் 3292. | அனையவள் கருத்தை உன்னா, அஞ்சனக் குன்றம் அன்னான், 'புனையிழை! காட்டு அது' என்று போயினான்; பொறாத சிந்தைக் கனை கழல் தம்பி பின்பு சென்றனன்; கடக்க ஒண்ணா வினை என வந்து நின்ற மான் எதிர் விழித்தது அன்றே. |
அனையவள் கருத்தை உன்னா - சீதையின் இவ் வருத்தச் சிந்தனையை எண்ணி; அஞ்சனக் குன்றம் அன்னான் - நீல மலை போன்ற இராமன்; 'புனையிழை - நல்லணி புனைந்தவளே!; அது காட்டு' என்று போயினான் - அம்மானை எனக்குக் காட்டுவாயாக' என்று புறப்படலானான்; பொறாத சிந்தை - இதனை ஏற்றுக் கொள்ள மனமின்றி; கனைகழல் தம்பி - ஓசை செய்யும் வீரக் கழலணிந்த தம்பி இலக்குவனும்; பின்பு சென்றனன் - அவர்கள் பின்னே சென்றான்; கடக்க ஒண்ணா வினை என - தாண்டிச் செல்ல முடியாத விதியினைப் போல; வந்து நின்ற மான் - வந்து நின்ற மாயமான்; எதிர் விழித்தது - எதிரில் வந்து காட்சி தந்தது. (அன்றே-அசை). விதி, தவறாமல் பயனளிப்பது போன்று, மாயமான் தீமை விளைவிக்கத் தவறாது வந்து நின்றது, எனினும் கவனமுள்ள தம்பி பின்தொடர்ந்தான். 56 3293. | நோக்கிய மானை நோக்கி, நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன்; 'நன்று இது' என்றான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்? |
|