| சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது தேவர் செய்த பாக்கியம் உடைமை அன்றோ? அன்னது பழுது போமோ? |
நோக்கிய மானை நோக்கி - எதிரில் விழித்து நின்ற மானைஉற்றுப் பார்த்து; நுதியுடை மதியின் ஒன்றும் தூக்கிலன் - இராமன்கூரிய அறிவின் துணை கொண்டு எதனையும் சீர்தூக்கிப்பார்க்கவில்லை; நன்று இது என்றான் - இந்த மான் மிக அழகியதுஎன்று தானும் கூறினான்; அதன் பொருள் சொல்லல் ஆகும்? -அச் சொல்லின் பொருள் நுட்பத்தை ஆராய்ந்து கூற முடியுமோ? முடியாது); சேக்கையின் அரவு நீங்கிப் பிறந்தது - அனந்தசயனத்திலிருந்து மண்ணுலகில் வந்து அவதாரம் செய்தமை; தேவர்செய்த பாக்கியம் உடைமை அன்றோ - தேவர்கள் ஆற்றியபுண்ணியம் என்று கூறலாம் அல்லவா?; அன்னது பழுது போமோ?- அப் புண்ணியம் வீணாகிப் போகுமோ? (போகாது என்றபடி). தேவர் செய்த பாக்கியத்தால் இராமாவதாரம் நிகழ்ந்தமையின்,மாய மானை இராமனும் தொடர ஆசைப்பட்டதன் கருத்து மறைமுகமாகப் புலனாகின்றது என்று சுட்டிக் காட்டினார். 57 3294. | 'என் ஒக்கும் என்னல் ஆகும்? இளையவ! இதனை நோக்காய்; தன் ஒக்கும் உவமை அல்லால், தனை ஒக்கும் உவமை உண்டோ? பல், நக்க தரளம் ஒக்கும்; பசும் புல்மேல் படரும் மெல் நா மின் ஒக்கும்; செம் பொன், மேனி; வெள்ளியின் விளங்கும் புள்ளி. |
'இளையவ! - தம்பியே!; இதனை நோக்காய் - இம்மானை நன்கு பாராய்; என் ஒக்கும் என்னல் ஆகும் - எதனை இதனோடு ஒப்பிட்டுக் கூற முடியும்?; தன் ஒக்கும் உவமை அல்லால் - தனக்குத் தானே ஒப்பாக உவமை கூறத்தக்கதே அல்லாமல்; தனை ஒக்கும் உவமை உண்டோ? - இதனைப் போன்ற ஒன்று என்று கூற வேறு பொருள் உலகில் ஏது?; பல் - இம் மானின் பற்கள்; நக்க தரளம் ஒக்கும் - சிரிக்கின்ற முத்துக்கள் போன்றுள்ளன; பசும்புல் மேல் படரும் மெல் நா - பச்சைப் புற்களின் மீது செல்லும் இதன் மெல்லிய நாக்கு; மின் ஒக்கும் - மின்னலைப் போன்றுள்ளது; மேனி செம் பொன் - உடலோ சிவந்த பொன்னைப் போன்றுள்ளது; புள்ளி வெள்ளியின் விளங்கும் - உடல் மேற் புள்ளிகளோ வெள்ளி போன்றுள்ளது (என்றான் இராமன்) |