பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 503

சிந்தையில் தெளிந்த தம்பி - என்று தன் மனத்தில் உறுதி கொண்ட
தம்பி இலக்குவன்; வேரி அம் தெரியல் வீர - மணம் கமழ்கின்ற
மாலையணிந்த வீரனே; ஈண்டு கண்டது கனக மானேல் - இங்குக்
காணப்படுவது பொன்மானாக இருக்கிற தென்றாலும்; என்னை
காரியம்? -
அதனால் நமக்கு என்ன பயன்?; மீள்வதே மேன்மை -
அதனை விட்டு நீங்கி வருவதே மேலான செயல்; என்றான் - என்று
கூறினான்.

     அது பொன்மயமான மான் என்பதால் நமக்கு என்ன பயன்என்ற
இலக்குவன் வினாவில், மாயையிலிருந்து விரைவி்ல் இராமன்மீள வேண்டுமே
என்ற கவலை மேலோங்கி நிற்கின்றது.                             60

3297. அற்று அவன் பகராமுன்னம்,
     அழகனை, அழகியாளும்,
'கொற்றவன் மைந்த! மற்றைக்
     குழைவுடை உழையை, வல்லை
பற்றினை தருதி ஆயின், பதியிடை
     அவதி எய்தப்
பெற்றுழி, இனிது உண்டாடப் பெறற்கு
     அருந் தகைமைத்து' என்றாள்.

    அற்று அவன் பகரா முன்னம் - இவ்வாறு இலக்குவன் கூறி
முடிக்கும் முன்; அழகனை - (ஒப்பற்ற) பேரழகனான இராமனிடம்;
அழகியாளும் - கட்டழகியான சீதையும்; 'கொற்றவன் மைந்த -
வெற்றியில் வல்ல தசரத குமாரனே; மற்றைக் குழைவுடை உழையை
-
மனத்தை நெகிழ்விக்கும் அந்த எழிலுடைய மானை; வல்லை
பற்றினை தருதியாயின் -
விரைவில் பிடித்துத் தருவாயானால்;
பதியிடை அவதி எய்தப்பெற்றுழி - அயோத்திக்கு வனவாசக் காலம்
முடிந்து செல்லுங்கால்; இனிது உண்டாட - மகிழ்வுடன்
விளையாடுதற்கு; பெறற்கு அருந் தகைமைத்து - கிடைத்தற்கு அரிய
பொருளாக இருக்கும்; என்றாள் - என்று கூறினாள்.

     'இம்மானால் யாது பயன்' என்ற இலக்குவன் வினாவுக்கு விடை
கூறினாற்போல் சீதையின் பேச்சு அமைந்தது. வனவாசம் முடிந்து
அயோத்தியில் செல்லும்போது இம் மான் எனக்கு விளையாட்டுத்
துணையாக இருக்கும் என்றாள். இக்கூற்று இராமன் பால் அருள்
சுரக்கும்படி அமைந்தது.                                        61

மானைப்பற்றி இராமலக்குவர் மாறுபாடு கொள்ளல்

3298. ஐய நுண் மருங்குல் நங்கை அஃது
உரைசெய்ய, ஐயன்,
'செய்வென்' என்று அமைய, நோக்கத்
     தெளிவுடைத் தம்பி செப்பும்