பக்கம் எண் :

மாரீசன் வதைப் படலம் 507

வாயிடை, மழலை இன்சொல்
     கிளியினின் குழறி, மாழ்கி,
'நாயக! நீயே பற்றி
     நல்கலைபோலும்' என்னா,
சேயரிக் குவளை முத்தம் சிந்துபு
     சீறிப் போனாள்.

    ஆயிடை - இப்பேச்சுக்களின் இடைப்புகுந்து; அன்னம்அன்னாள் -
பேடை அன்னம் போன்ற சீதை; மாழ்கி -வருத்தமுற்று; அமுது
உகுத்தனைய -
அமுதம் சிந்தினாற் போன்று;செய்ய வாயிடை மழலை
இன்சொல் -
சிவந்த வாயில் இனியமழலை போலும் சொற்களை;
கிளியினின் குழறி - கிளி மொழிவதுபோல் கொஞ்சிக் கூறி; 'நாயக - என்
நாதனே; நீயே பற்றி நல்கலைபோலும் - இம்மானை நீயே பிடித்துத்
தரமாட்டாயா; என்னா -என்று (ஊடல் கொண்டு); சேயரிக் குவளை -
சிவந்த வரிகளைஉடைய குவளை மலர் போன்ற கண்களில்; முத்தம்
சிந்துபு -
கண்ணீர் முத்துக்கள் சிந்த; சீறிப் போனாள் - கோபம் கொண்டு
செல்லத் தொடங்கினாள்.

     இலக்குவன் கருத்தைத் தன் ஊடற் கோலத்தால் இராமபிரானிடம்
மறுத்துக் கூறுகின்றாள் சீதை.                                    67

இளையவனை நிறுத்திவிட்டு இராமன் மானைத் தொடர்தல்

3304.போனவள் புலவி நோக்கி, புரவலன்,
     'பொலன் கொள் தாராய்!
மான் இது நானே பற்றி, வல்லையின்
     வருவென், நன்றே;
கான் இயல் மயில் அன்னாளைக்
     காத்தனை இருத்தி' என்னா,
வேல் நகு சரமும், வில்லும்
     வாங்கினன் விரையலுற்றான்.

    போனவள் புலவி நோக்கி - அவ்வாறு சென்ற சீதையின்
ஊடலைப் பார்த்து; புரவலன் - அனைவரையும் காத்தல் வல்ல
இராமன், (இலக்குவனிடம்); 'பொலன் கொள் தாராய் -
பொன்மயமான மலர் மாலை புனைந்தவனே; மான் இது நானே பற்றி-
இம் மானை நானே பிடித்துக் கொண்டு; வல்லையின் வருவென்
நன்றே -
விரைவில் நன்கு வந்து விடுவேன்; (அதுவரை); கான்
இயல் மயில் அன்னாளை -
கானகத்து மயில் போன்ற சீதையை;
காத்தனை இருத்தி - நீ காவல் காத்து இருப்பாயாக; என்னா -
என்று கூறி; வேல் நகு சரமும் வில்லும் வாங்கினன் - வேல்
போன்ற கூரிய அம்புகளையும் வில்லையும் எடுத்துக் கொண்டு;
விரையல் உற்றான் - வேகமாகச் செல்லலானான்.