சீதையின் ஊடலைத் தவிர்க்கும் பொருட்டு இராமன் தானே புறப்பட்டான். மேகம் கண்டு களிக்கும் மயில் போல, நீல மேக வடிவினனான இராமனைக் கண்டு களிக்கும் மயில் சீதை என்பதாம். கோப்பெருந்தேவி ஊடல் பாண்டியனுக்கும் கண்ணகிக்கும் அவலம் விளைத்தது; சீதையின் ஊடல் சீதைக்கும் இராமனுக்கும் அவலம் விளைத்தது. 68 3305. | 'முன்னமும் மக வாய் வந்த மூவரில் ஒருவன் போனான்; அன்ன மாரீசன் என்றே அயிர்த்தனன், இதனை; ஐய! இன்னமும் காண்டி; வாழி, ஏகு' என, இரு கை கூப்பி, பொன் அனாள் புக்க சாலை காத்தனன், புறத்து நின்றே. |
'முன்னமும் மக வாய் வந்த - விசுவாமித்திர முனிவனது யாகத்தில் முன்னர் வந்த; மூவரில் ஒருவன் போனான் - மூன்று அரக்கருள் ஒருவன் ஆகிய மாரீசன் தப்பிப் போனான்; இதனை அன்ன மாரீசன் என்றே - அந்த மாரீசனாக (இம்மான்) இருத்தல் கூடுமோ என்று; அயிர்த்தனன் - ஐயம் கொண்டேன்; (அதனால்); ஐய - என் ஐயா; இன்னமும் காண்டி - மேலும் சிந்தித்துப் பாராய்; ஏகு - செல்வாயாக; வாழி - (தீங்கு நேராது) வாழ்க; என இரு கை கூப்பி - என்று இரண்டு கரங்களையும் எடுத்து வணங்கி; பொன்னனாள் புக்க சாலை - திருமகளான சீதை புகுந்த பர்ண சாலையை; புறத்து நின்றே காத்தனன் - வாசலில் நின்றவாறு காவல் காக்கத் தொடங்கினான். கூரிய அறிவு மிக்க இலக்குவன் தன் சகோதரனுக்குக் கடைசிக் கணத்திலும் அறிவுரை கூறித் தெருட்டும் நுட்பம் வியப்புக்கு உரியது. மகம் - யாகம்; மக வாய் வேள்வியின் போது. 69 3306. | மந்திரத்து இளையோன் சொன்ன வாய்மொழி மனத்துக் கொள்ளான்; சந்திரற்கு உவமை சான்ற வதனத்தாள் சலத்தை நோக்கி, சிந்துரப் பவளச் செவ் வாய் முறுவலன், சிகரச் செவ்விச் சுந்தரத் தோளினான், அம் மானினைத் தொடரலுற்றான். |
|