பக்கம் எண் :

510ஆரணிய காண்டம்

மீட்டும் தாள் நீட்டற்கு, அம்மா! வேறும்
     ஓர் அண்டம் உண்டோ?
ஓட்டினான், தொடர்ந்த தன்னை,
     ஒழிவு அற நிறைந்த தன்மை,
காட்டினான் அன்றி, அன்று, அக்
     கடுமை யார் கணிக்கற்பாலார்?

    (இராமன் அந்த மாயமானைத் தொடருவதற்காக); உலகம்
மூன்றும் அளந்த பாதம் -
மூவுலகையும் அளந்த திருவடிகளை;
நின்று எடுத்து நீட்டினான் - எடுத்து நீள வைத்தான்; மீட்டும் தாள்
நீட்டற்கு வேறும் ஓர் அண்டம் உண்டோ? -
மேலும் அவன்
அளப்பதற்குரிய உலகம் வேறு ஒன்று இருக்கிறதோ?; ஓட்டினான் -
அத்தகைய பாதங்களால் (மானைத்) துரத்தினான்; தொடர்ந்த தன்னை
-
அவ்வாறு துரத்திய பெருமான் மானைத் தொடர்ந்து தனது; ஒழிவு
அற நிறைந்த தன்மை -
நீக்கமற எங்கும் நிறைந்த நிலையினை;
காட்டினான் - (எங்கும் திரிந்ததால்) காட்டி நின்றான்; அன்றி -
இதுதான் உண்மையே அன்றி; அன்று அக்கடுமை - அன்று
அம்மான் சென்ற வேகத்தின் கடுமையை; கணிக்கற்பாலார் யார்? -
கணக்கிட வல்லவர் யாவர்?

     வாமனனாக இருந்து திருவிக்கிரமாவதாரம் எடுத்த காலை எல்லா
உலகங்களிலும் கால் நீட்டிய திருமால், இன்று இந்த மான் காரணமாக
எல்லா இடங்களிலும் தொடர்ந்து காட்சி தந்தான். அதனால் எங்கும்
நிறை இறைவன் எனக் காட்டிக் கொண்டான். அம்மா - அசை;
வியப்பிடைச் சொல்லுமாம்.                                     72

3309.குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக்
     குதிக்கும்; கூடச்
சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல்
     ஆம் தகைமைத்து ஆகும்;
நின்றதே போல நீங்கும்;
     நிதிவழி நேயம் நீட்டும்
மன்றல் அம் கோதை மாதர் மனம்
     எனப் போயிற்று, அம்மா!

    குன்றிடை இவரும் - அந்த மான் மலைகளின் மீது ஏறும்;
மேகக் குழுவிடைக் குதிக்கும் - வான்முகில்களிடையே சென்று
பாயும்; கூடச் சென்றிடின் அகலும் - அருகில் சென்றால்
தொலைவில் விலகி ஓடும்; தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து
ஆகும் -
அருகில் செல்லத் தாமதித்தால் தீண்டுதற்கு அண்மையாக
வந்து நிற்கும்; நின்றதே போல நீங்கும் - (அருகில் சென்றால்)
நின்றாற் போல் தோன்றியபடி தொலைவில் விலகி நீங்கும்; நிதி வழி
நேயம் நீட்டும் -
கொடுத்த பணத்துக்கு ஏற்றபடி அன்பைப் பகிர்ந்து
தரும்; மன்றல் அம் கோதை மாதர் - மணம் கமழ் மாலை சூடிய
விலை