| மீட்டும் தாள் நீட்டற்கு, அம்மா! வேறும் ஓர் அண்டம் உண்டோ? ஓட்டினான், தொடர்ந்த தன்னை, ஒழிவு அற நிறைந்த தன்மை, காட்டினான் அன்றி, அன்று, அக் கடுமை யார் கணிக்கற்பாலார்? |
(இராமன் அந்த மாயமானைத் தொடருவதற்காக); உலகம் மூன்றும் அளந்த பாதம் - மூவுலகையும் அளந்த திருவடிகளை; நின்று எடுத்து நீட்டினான் - எடுத்து நீள வைத்தான்; மீட்டும் தாள் நீட்டற்கு வேறும் ஓர் அண்டம் உண்டோ? - மேலும் அவன் அளப்பதற்குரிய உலகம் வேறு ஒன்று இருக்கிறதோ?; ஓட்டினான் - அத்தகைய பாதங்களால் (மானைத்) துரத்தினான்; தொடர்ந்த தன்னை - அவ்வாறு துரத்திய பெருமான் மானைத் தொடர்ந்து தனது; ஒழிவு அற நிறைந்த தன்மை - நீக்கமற எங்கும் நிறைந்த நிலையினை; காட்டினான் - (எங்கும் திரிந்ததால்) காட்டி நின்றான்; அன்றி - இதுதான் உண்மையே அன்றி; அன்று அக்கடுமை - அன்று அம்மான் சென்ற வேகத்தின் கடுமையை; கணிக்கற்பாலார் யார்? - கணக்கிட வல்லவர் யாவர்? வாமனனாக இருந்து திருவிக்கிரமாவதாரம் எடுத்த காலை எல்லா உலகங்களிலும் கால் நீட்டிய திருமால், இன்று இந்த மான் காரணமாக எல்லா இடங்களிலும் தொடர்ந்து காட்சி தந்தான். அதனால் எங்கும் நிறை இறைவன் எனக் காட்டிக் கொண்டான். அம்மா - அசை; வியப்பிடைச் சொல்லுமாம். 72 3309. | குன்றிடை இவரும்; மேகக் குழுவிடைக் குதிக்கும்; கூடச் சென்றிடின், அகலும்; தாழின், தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்; நின்றதே போல நீங்கும்; நிதிவழி நேயம் நீட்டும் மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று, அம்மா! |
குன்றிடை இவரும் - அந்த மான் மலைகளின் மீது ஏறும்; மேகக் குழுவிடைக் குதிக்கும் - வான்முகில்களிடையே சென்று பாயும்; கூடச் சென்றிடின் அகலும் - அருகில் சென்றால் தொலைவில் விலகி ஓடும்; தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும் - அருகில் செல்லத் தாமதித்தால் தீண்டுதற்கு அண்மையாக வந்து நிற்கும்; நின்றதே போல நீங்கும் - (அருகில் சென்றால்) நின்றாற் போல் தோன்றியபடி தொலைவில் விலகி நீங்கும்; நிதி வழி நேயம் நீட்டும் - கொடுத்த பணத்துக்கு ஏற்றபடி அன்பைப் பகிர்ந்து தரும்; மன்றல் அம் கோதை மாதர் - மணம் கமழ் மாலை சூடிய விலை |