| உற்ற வேகத்தின் உம்பரின் ஓங்கினான். |
'இனிப் பற்றுவான் அல்லன் - இனி (இராமன் என்னைப்) பிடிக்க முயலமாட்டான்; பகழியால் செற்று - அம்பால் கொன்று; வானில் செலுத்தல் உற்றான் - விண்ணில் செலுத்தக் கருதினான்'; என - என்று; மனக் கொளா - சிந்தையில் உணர்ந்தவனாய்; அம் மாய அரக்கன் - மாயை வல்ல அம்மாரீசன்; உற்ற வேகத்தின் - மிக்க விரைவுடன்; உம்பரின் ஓங்கினான் - வானத்தில் உயரே பாய்ந்தான். மற்ற - அசை. பிடிக்க எண்ணும் மனநிலை இராமனிடம் மாறிவிட்டதை மாரீசன் அறிந்தான். இனி அம்பால் கொல்வான் என்று கணித்தான். 75 3312. | அக் கணத்தினில், ஐயனும், வெய்ய தன் சக்கரத்தின் தகைவு அரிது ஆயது ஒர், செக்கர் மேனிப் பகழி செலுத்தினான்- 'புக்க தேயம் புக்கு இன் உயிர் போக்கு' எனா. |
அக் கணத்தினில் - அந்த நொடிப் பொழுதில்; ஐயனும் - இராமனும்; புக்க தேயம் புக்கு - எங்கே அந்த மான் செல்லுகிறதோ அங்கெல்லாம் சென்று; இன் உயிர் போக்கு எனா - அதன் இனிய உயிரை நீக்கு என்று ஆணையிட்டு; வெய்ய தன் சக்கரத்தின் - கொடிய தன் சக்கராயுதம் போன்று; தகைவு அரிது ஆயது ஒர் - தடுப்பதற்கு இயலாத ஒரு; செக்கர் மேனிப் பகழி - சிவந்த அம்பினை; செலுத்தினான் - ஏவினான். தப்ப முயலும் மாரீசனைத் தாக்கி அழிக்கும் இராமபாணம் ஏவப் பெற்றது. 76 3313. | நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப் பட்டது; அப்பொழுதே, பகு வாயினால், அட்ட திக்கினும், அப்புறமும் புக விட்டு அழைத்து, ஒரு குன்று என வீழ்ந்தனன். |
நெட்டிலைச் சரம் - நெடிய இலை வடிவம் கொண்ட அவ்வம்பு; வஞ்சனை நெஞ்சுறப் பட்டது - வஞ்சகம் நிரம்பிய (மாரீசன்) நெஞ்சில் சென்று தாக்கியது; அப்பொழுதே - அந்தக் கணமே; பகு வாயினால் - பிளவுபட்ட வாயினால்; அட்டதிக்கினும் - எட்டுத் திசைகளிலும்; அப்புறமும் |