புக - அதற்கு அப்பாலும் செல்லும்படி; விட்டு அழைத்து - (சீதா லட்சுமணா) என்று இராமன் குரலில் கூவி; ஒரு குன்று என வீழ்ந்தனன் - மலை விழுவது போல (தன் இயற்கை வடிவம் கொண்டு) வீழ்ந்தான். தன் குரலை இராமன் குரலாக மாற்றி அழைத்து மடிந்தான்.மடியும் போதும் வஞ்சனையால் 'சீதா லட்சுமணா' என்று குரல்கொடுத்தான். 77 மாயம் உண்டு என மதித்து இராமன் பர்ண சாலைக்கு விரைதல் 3314. | வெய்யவன், தன் உருவொடு வீழ்தலும், 'செய்யது அன்று' எனச் செப்பிய தம்பியை, ஐயன் வல்லன்; என் ஆர் உயிர் வல்லன்; நான் உய்ய வந்தவன் வல்லன்' என்று உன்னினான். |
வெய்யவன் - கொடியவனாகிய மாரீசன்; தன் உருவொடு வீழ்தலும் - தன் இயற்கை வடிவத்தோடு மரண முற்று வீழவும்; செய்யது அன்று எனச் செப்பிய தம்பியை - இம்மான் உண்மையானது அன்று என்று (நுனித்துணர்ந்து) கூறிய தம்பி இலக்குவனைக் குறித்து; 'ஐயன் வல்லன் - என் இளவல் திறமையாளன்; என் ஆர் உயிர் வல்லன் - என் இனிய உயிர் போன்றவன் வல்லமை உடையவன்; நான் உய்ய வந்தவன் வல்லன்- என்னைக் காக்க (என் தம்பியாக) வந்தவன் பேரறிவாளி'; என்று உன்னினான் - என்று இராமன் எண்ணினான். வல்லன் என்று பன் முறை கூறியது இலக்குவன் வல்லமையை உணர்ந்த வியப்பினால் என்க. தம்பியை ஐயன், ஆர் உயிர், உய்ய வந்தவன் என்று பாராட்டிச் சிறப்பித்தான் இராமன். 78 3315. | ஆசை நீளத்து அரற்றினன் வீழ்ந்த அந் நீசன் மேனியை, நின்று உற நோக்கினான்; மாசு இல் மா தவன் வேள்வியின் வந்த மாரீசனே இவன் என்பதும் தேறினான். |
ஆசை நீளத்து - திசைகளின் எல்லை அளவும் எட்டும்படி; அரற்றினன் வீழ்ந்த - குரலெடுத்துக் கூவி மாண்ட; அந்நீசன் மேனியை - |