தேரும் அறிவினன் ஆதலால் - (இப்போதும்) என்னுடைய வலிமையை நன்கு தெளிவாக அறிந்திருப்பவனாதலால்; மாற்றம் இன்னது தேற்றும் - சீதைக்கு ஆறுதல் கூறி இக்குரலின் உண்மையை உணர்த்தியிருப்பான்; எனத் தேறினான் - என ஆறுதல் கொண்டு மனத் தெளிவு கொண்டான்; ஆல் - அசை. தம்பியின் அறிவையும், ஆறுதல் தரும் மாட்சியையும் போற்றி மகிழ்ந்தான். 81 3318. | 'மாள்வதே பொருள் ஆக வந்தான்அலன்; சூழ்வது ஓர் பொருள் உண்டு; இவன் சொல்லினால் மூள்வது ஏதம்; அது முடியாமுனம் மீள்வதே நலன்' என்று, அவன் மீண்டனன். |
(எனினும்); 'மாள்வதே பொருள் ஆக - சாவதே நோக்கமாக; வந்தான் அலன் - மாரீசன் வந்தவனாகத் தோன்றவில்லை; சூழ்வது ஓர் பொருள் உண்டு - இவன் திட்டமிட்ட ஒரு நோக்குடன் வந்துள்ளான்; இவன் சொல்லினால் - இவன் கூக்குரலால்; மூள்வது ஏதம் - தீங்கு நிகழ உள்ளது; அது முடியா முனம் - அத் தீங்கு நிறைவேறுவதன் முன்னே; மீள்வதே நலன் - திரும்பப் பர்ண சாலையை அடைவதே நலம் பயக்கும்;" என்று அவன் மீண்டனன் - என்று எண்ணித் திரும்பி வரலானான். இப்படலத்தில் அரக்கர் மாயைக்கு அவதார நாயகர்களும் இலக்காவதும், உயர் குடிப் பெண்ணாயினும் தயக்க மயக்கங்களுக்கு இரையாவதும், நுட்ப அறிவுடையார் எத்தீமையையும் முன்கூட்டி அறிவர் என்பதும் வெளிப்படுத்தப்படுதலைக் காண்கிறோம். 82 |