பக்கம் எண் :

528ஆரணிய காண்டம்

’பேதையேன்' என்றான். அறத்தின் காவலும் விதியின் வலிமையும்
ஒருங்கே இலக்குவன் எண்ணத்தில் வெளிப்படுகின்றன.              18

3337.'போவது புரிவல் யான்;
     புகுந்தது உண்டுஎனின்,
காவல்செய் எருவையின்
     தலைவன் கண்ணுறும்;
ஆவது காக்கும்' என்று
     அறிவித்து, அவ் வழி,
தேவர் செய் தவத்தினால்
     செம்மல் ஏகினான்.

    யான் போவது புரிவல் - நான் செல்வேன்; புகுந்தது
உண்டெனின் -
(ஏதேனும் தீயது) நேர்வது உண்டானால்; காவல்
செய் எருவையின் தலைவன் கண்ணுறும் ஆவது காக்கும் -
காவல் புரிகின்ற கழுகரசன் சடாயு கண்டு தன்னாலியன்ற அளவு
பாதுகாப்பான்; என்று அறிவித்து - எனச் சீதையிடம் கூறி; செம்மல்
தேவர் செய் தவத்தினால் அவ்வழி ஏகினான் -
இலக்குவன்
தேவர்கள் செய்த தவத்தினால் (இராமன் மானைத் தொடர்ந்த) அந்த
வழியில் சென்றான்.

     'காவல் செய் எருவையின் தலைவன்' என்பது சடாயுவைச்
சுட்டும். சடாயு காண் படலத்தில் 'நீவிரும் நல்நுதல் தானும் இக்
காட்டில் வைகுதிர்; காக்கு வென் யான்' என்ற மொழிகள் (2727)
இதனை வலியுறுத்தும். இலக்குவன் சீதையைத் தனியே விட்டுச்
செல்லவும் அப்போது இராவணன் அவளைக் கவர்ந்து செல்லவும்
அதனால் அவனும் அவன் குலமும் மாளவும் செய்ததற்கு அடிப்படை
தேவர்கள் செய்த தவமாகும்.                                 19

இலக்குவன் பெயர்ந்ததும், இராவணன் தவக் கோலத்துடன்
தோன்றுதல்

3338. இளையவன் ஏகலும்,
     இறவு பார்க்கின்ற
வளை எயிற்று இராவணன்,
     வஞ்சம் முற்றுவான்,
முளை வரித் தண்டு ஒரு
     மூன்றும், முப் பகைத்
தளை அரி தவத்தவர்
     வடிவம், தாங்கினான்.

இளையவன் ஏகலும் - இலக்குவன் அவ்வாறு சென்றதும்; இறவு
பார்க்கின்ற வளை எயிற்று இராவணன் -
இலக்குவன் நீங்கிச்செல்வதை