பக்கம் எண் :

576ஆரணிய காண்டம்

கொண்டு; ஒதுங்கி நையவே - மறைந்து பதுங்கி வருந்த.

     சடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள்
கிளைகளோடும் தலைப்புறத்துடனும் விழவும், வானத்தில் செல்லும்
மேகம் மேலும் மேலே செல்லவும், கருடன் வருகின்றான் எனப்
பாம்புகள் படம் குறைந்து நையவும், வந்தனன் என்க. சாகை - கிளை,
மாகம் - பெருமை, ஒளித்து - ஒடுக்கி, கலுழன் - கருடன் மீமிசை -
ஒருபொருட் பன்மொழி.                                        3

3406.யானையும், யாளியும்,
     முதல யாவையும்,
கான் நெடு மரத்தொடு
     தூறு கல் இவை
மேல் நிமிர்ந்து, இரு சிறை
     விசையின் ஏறலால்,
வானமும் கானமும்
     மாறு கொள்ளவே.

    யானையும் யாளியும் முதல யாவையும் - யானைகளும்
யாளிகளும் முதலாகிய எல்லா மிருகங்களும்; கான் நெடு மரத்தொடு-
காட்டில் உள்ள மரங்களும்; தூறு கல் இவை - புதர்களும்கற்களும்
ஆகிய இவையும்; இரு சிறை விசையின் மேல் நிமிர்ந்து
ஏறலால் -
இரண்டு சிறகுகள் வீசும் காற்றின் (வேகத்தால்) (நிலை
கெட்டு) மேல் ஏறி வானத்தில் நிரம்புதலால்; வானமும் கானமும்
மாறுகொள்ளவே -
ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறாடி
நிற்கவும்... வந்தனன்"

     யானை யாளி முதலிய மிருகங்களும் காட்டில் உள்ளமரங்களும்,
புதர்களும், கற்களும் சடாயுவின் இரு சிறகுகள் வீசும்காற்றின் வேகத்தால்
நிலை கெட்டு ஆகாயமும் காடுகளும் ஒன்றொடுஒன்று மாறு கொண்டு
நின்றன என்றவாறு. தூறு - புதர், முதல -குறிப்புப் பெயரெச்சம்.       4

3407.'உத்தமன் தேவியை, உலகொடு
     ஓங்கு தேர்
வைத்தனை! ஏகுவது
     எங்கு? வானினோடு
இத்தனை திசையையும் மறைப்பென்,
     ஈண்டு' எனா,
பத்திரச் சிறைகளை
     விரிக்கும் பண்பினான்;

    உத்தமன் தேவியை - கல்யாண குணங்கள் நிறைந்தஉத்தமனாகிய
இராமனது மனைவியை; உலகொடு ஓங்கு தேர்வைத்தனை - நிலத்தொடு