கொண்டு; ஒதுங்கி நையவே - மறைந்து பதுங்கி வருந்த. சடாயுவின் சிறகில் இருந்து வரும் பெருங்காற்றால் மரங்கள் கிளைகளோடும் தலைப்புறத்துடனும் விழவும், வானத்தில் செல்லும் மேகம் மேலும் மேலே செல்லவும், கருடன் வருகின்றான் எனப் பாம்புகள் படம் குறைந்து நையவும், வந்தனன் என்க. சாகை - கிளை, மாகம் - பெருமை, ஒளித்து - ஒடுக்கி, கலுழன் - கருடன் மீமிசை - ஒருபொருட் பன்மொழி. 3 3406. | யானையும், யாளியும், முதல யாவையும், கான் நெடு மரத்தொடு தூறு கல் இவை மேல் நிமிர்ந்து, இரு சிறை விசையின் ஏறலால், வானமும் கானமும் மாறு கொள்ளவே. |
யானையும் யாளியும் முதல யாவையும் - யானைகளும் யாளிகளும் முதலாகிய எல்லா மிருகங்களும்; கான் நெடு மரத்தொடு- காட்டில் உள்ள மரங்களும்; தூறு கல் இவை - புதர்களும்கற்களும் ஆகிய இவையும்; இரு சிறை விசையின் மேல் நிமிர்ந்து ஏறலால் - இரண்டு சிறகுகள் வீசும் காற்றின் (வேகத்தால்) (நிலை கெட்டு) மேல் ஏறி வானத்தில் நிரம்புதலால்; வானமும் கானமும் மாறுகொள்ளவே - ஆகாயமும் காடுகளும் ஒன்றொடு ஒன்று மாறாடி நிற்கவும்... வந்தனன்" யானை யாளி முதலிய மிருகங்களும் காட்டில் உள்ளமரங்களும், புதர்களும், கற்களும் சடாயுவின் இரு சிறகுகள் வீசும்காற்றின் வேகத்தால் நிலை கெட்டு ஆகாயமும் காடுகளும் ஒன்றொடுஒன்று மாறு கொண்டு நின்றன என்றவாறு. தூறு - புதர், முதல -குறிப்புப் பெயரெச்சம். 4 3407. | 'உத்தமன் தேவியை, உலகொடு ஓங்கு தேர் வைத்தனை! ஏகுவது எங்கு? வானினோடு இத்தனை திசையையும் மறைப்பென், ஈண்டு' எனா, பத்திரச் சிறைகளை விரிக்கும் பண்பினான்; |
உத்தமன் தேவியை - கல்யாண குணங்கள் நிறைந்தஉத்தமனாகிய இராமனது மனைவியை; உலகொடு ஓங்கு தேர்வைத்தனை - நிலத்தொடு |