பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 599

'போச்சு; இத்தனை போலும் நின் ஆற்றல்?'
     எனப் புகன்றான்.

    மார்பினும் தோள்கள் மேலும் - (பின்பு சடாயு இராவணன்
உடைய) மார்பின் மேலும் (இருபது) தோள்கள் மேலும்; மாச்சிச்சிரல்
பாய்ந்தென -
பெரிய சிச்சிலிப் பறவை பாய்வது போல் (பாய்ந்து);
சிறகால் ஓச்சிப் புடைத்தான் - (தன்) சிறகுகளால் விரைவாக எறிந்து
அடித்தான்; இராவணனும் - அதனால் இராவணனும்; உலையா
விழுந்து -
வருந்தி விழுந்து; முடிசாய்ந்து மூச்சித்த இருந்தான் -
தலை சாய்த்து மயங்கிய நிலையில் இருந்தான்; இத்தனை போலும் -
(அத்தன்மை கண்டு சடாயு) இத்தனைதானா; நின் ஆற்றல் - உனது
வலிமை; போச்சு எனப்புகன்றான் - போய் விட்டது என்று
(இகழ்ச்சியாகக்) கூறினான்.

     மாச்சிரல் பாய்வது போல் பாய்ந்து சடாயு இராவணனதுமார்பிலும்
தோளிலும் தன் சிறகால் ஓச்சிப் புடைத்தான். அதனால்இராவணன்
மூச்சற்றுத் தலை சாய்த்து மயங்கி, இருந்தான்; அது கண்டசடாயு 'இது
தானா உன் வலிமை' என இகழ்ந்து கூறினான். சிரல் -சிச்சிலி, மீன் கொத்தி.
போச்சு - போயிற்று பேச்சு வழக்கு உலையா -செய்யா என்னும் வாய்பாட்டு
உடன்பாட்டு வினை எச்சம்.                                      40

3443. அவ்வேலையினே முனிந்தான்; முனிந்து,
     ஆற்றலன்; அவ்
வெவ் வேல் அரக்கன் விடல் ஆம்
     படை வேறு காணான்;
'இவ் வேலையினே, இவன் இன் உயிர்
     உண்பென்' என்னா,
செவ்வே, பிழையா நெடு வாள் உறை
     தீர்த்து, எறிந்தான்.

    அவ்வேலையினே - (உன் வலிமை போச்சு இத்தனை போலும்
நின் ஆற்றல்) என்று (சடாயு கூறிய) அந்த நேரத்தில்; முனிந்தான்
முனிந்து -
(இராவணன்) சினம் கொண்டான் முனிந்து; ஆற்றலன் -
(அச்) சினத்தை ஆற்றமுடியாதவனாகிய; அவ்வெவ்வேல் அரக்கன்-
அந்தக் கொடிய வேலை ஏந்திய அரக்கன்; விடல் ஆம் படை
வேறு காணான் -
(சடாயுவின் மீது) விடுதற்கு உரிய படைக் கலங்கள்
வேறு ஒன்றையும் காணாதவனாய்; இவ் வேலையினே -
இப்பொழுதே; இவன் இன் உயிர் உண்பென் என்னா - இந்தச்
சடாயுவினுடைய இனிய உயிரை உண்பேன் என்று சொல்லி; செவ்வே
பிழையா நெடுவாள் -
(பகைவரைக்) கொல்லுதல் தப்பாத நீண்ட தன்
சந்திரகாசம் என்னும் வாளை; உறை தீர்த்து எறிந்தான் - உறையில்
இருந்து (வெளியில்) எடுத்து வீசினான்.