பக்கம் எண் :

604ஆரணிய காண்டம்

     "நாயக நீயே பற்றி நல்கலை போலும் என்னா
     சேயரிக் குவளை முத்தம் சிந்துபு சீறிப் போனாள். (3303)

     என்ற பாடல் கருத்தையும், இலக்குவனிடம்

     "ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்,
     பெரு மகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
     வெருவலை நின்றனை; வேறு என்? யான் இனி
     எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா, (3331)

     என்று கூறிய பாடல் கருத்தையும் உள்ளடக்கி வந்தது. ஆணி -
உரையாணி, பொன்னின் மாற்றைக் காட்டும் கல் எனலுமாம். உந்தையர் -
உம் தந்தையார் நின்றுளோர் - வினையாலணையும் பெயர், கொடு -
இடைக்குறை, வம் - வாரும் அல்லது வம்மின் என்பதன் விகாரம் என்பர். 47

3450.'கற்பு அழியாமை என்
     கடமை; ஆயினும்,
பொற்பு அழியா வலம்
     பொருந்தும் போர்வலான்
வில் பழியுண்டது;
     வினையினேன் வந்த
இல் பழியுண்டது' என்று,
     இரங்கி ஏங்கினாள்.

    கற்பு அழியாமை - கற்புக் கெடாமல் இருப்பது; என் கடமை
ஆயினும் -
எனது கடமையே ஆனாலும்; பொற்பு அழியா வலம்
பொருந்தும் -
அழகு (பண் பழகு) கெடாத வலிமை பொருந்திய; போர்
வலான் -
போர்த் தொழிலில் வல்லானாகிய இராமனது; வில் பழியுண்டது
-
(கோதண்டம் என்னும்) வில்லுக்குப் பழி வந்தது; வினையினேன் வந்த -
தீவினையினேன் ஆகிய (யான்) தோன்றிய; இல் பழியுண்டது - குடிக்குப்
பழி வந்தது; என்று இரங்கி ஏங்கினாள் - என்று கூறி வருத்தம் கொண்டு
அழுதாள்.

     இராமன் மனைவியாகிய எனக்குக் கற்பழியாமை கடன் என்று கற்புக்
கெடாது நான் இருந்தேன் என்றாலும், பெரு வலி பொருந்திய போர்த்
தொழில் வல்ல இராமனது வில்லுக்கும் யான் பிறந்த குடிக்கும் என்னால்
பெரும்பழி வந்தது' என்று கூறி வருத்தம் கொண்டு அழுதாள். வலம் -
வலிமை, வில் - கோதண்டம் என்னும் வில், இல் - குடி (வீடு எனக்
கொண்டு) ஆகுபெயர் எனினுமாம் அழியா - ஈறுகெட்ட எதிர் மறைப்
பெயரெச்சம். வினையினேன் - வினையாலணையும் பெயர்.            48

3451.'எல் இயல் விசும்பிடை
     இருந்த நேமியாய்!