பக்கம் எண் :

624ஆரணிய காண்டம்

தாம வார்கணைப் புட்டிலும்
     முதலிய தாங்கி,
வாம மால் வரை மரன்
     இவை மடிதர, வயவர்,
பூமிமேல் அவன் தேர் சென்ற
     நெடுநெறி போனார்.

    அமலனும் - குற்றம் அற்றவன் ஆகிய இராமனும்; 'ஆம் அதே
இனி அமைவது' என்று -
ஆம் அச் செயலே இனிச் செயத்தக்கது என்று
கூறி; வயவர் - வீரர்களாகிய இராமலக்குவர்; தாமவார் கணைப்புட்டிலும்
முதலிய மெய்யில் தாங்கி -
மாலை போல் அமைந்த நீண்ட அம்பு
அறாத்தூணி முதலிய (படைக்கலங்களை) உடம்பில் தரித்துக் கொண்டு;
வாம மால் வரை - அழகுள்ள பெரிய மலைகள் (மற்றும்); மரன் இவை
மடிதர -
மரங்கள் ஆகிய இவை அழியும் படி; பூமிமேல் அவன் தேர்
சென்ற நெடுநெறி போனார் -
பூமியில் அந்த இராவணனது தேர் சென்ற
நீண்ட வழியில் சென்றார்கள்.

     அமலன், 'இனிச் செயத்தக்கது நீ கூறிய வாறே' என ஏற்றுக்
கொண்டான். உடனே இருவரும் படைக்கலந்தாங்கி இராவணன் தேர் சென்ற
வழியில் சென்றனர். தாமம் - மாலை போன்ற வடிவுடைய. வார் - நீண்ட.
புட்டில் - அம்பு அறாத்தூணி. வாமம் - அழகு. வயவர் - வீரர். மரன் -
கடைப்போலி.                                                77

3480. மண்ணின் மேல் அவன் தேர்
     சென்ற சுவடு எலாம் மாய்ந்து,
விண்ணின் ஓங்கியது ஒரு நிலை;
     மெய் உற வெந்த
புண்ணினூடு உறு வேல் என,
     மனம் மிகப் புழுங்கி,
எண்ணி, 'நாம் இனிச் செய்வது
     என்? இளவலே!' என்றான்.

    அவன் தேர் - சீதையை எடுத்துச் சென்றவனுடைய, தேரின் சக்கரப்
பதிவுகள்; மண்ணின் மேல் சென்ற சுவடு எலாம் மாய்ந்து - மண்ணின்
மேல் சென்ற அடையாளம் எல்லாம் மறைந்து; ஒரு நிலை - ஓர் இடத்தில்;
விண்ணின் ஓங்கியது - அத்தேர் வானத்தில் உயர்ந்ததாகத் தெரிந்தது;
(அது கண்ட இராமன்); மெய் உற வெந்த புண்ணினூடு உறுவேல் என -
முழுதுமாய் வெந்த புண்ணுக்கு இடையில் நுழைந்த வேல் போல; மனம்
மிகப் புழுங்கி -
மனத்தால் மிகுதியாகத் தவித்து; இளவலே -
இளையவனே; இனி நாம் எண்ணி என் செய்வது - இனிமேல் நாம்
எண்ணிப் பார்த்து என்ன செய்வது; என்றான் - (என்று இலக்குவனிடம்)
கூறினான்.