பக்கம் எண் :

64ஆரணிய காண்டம்

வரவேற்றான்; ஆனவன் - அப்படி வந்த இராமனும்; அடி தொழ -
முனிவனின்அடிவணங்க; அருள் வர அழுதான் - அன்பு பெருகக்
கண்ணீர் சிந்தினான்; தானுடை இடவகைதழுவினன் நுழை வான் -
தானிருக்கும் குடிலிடத்து இராமனைத் தழுவிக் கொண்டு உட்புகுவார்.

     புலமை - அறிவு, ஞானம். அருள் - இலக்கணையாய் அன்பிற்காயிற்று
இட வகை - இருப்பிடம்,வீடு தானுடை இடவகை தழுவினன் நுழைவான்
என்பதற்குத் தன்னடியார் இருப்பிடமே தன் வைகுந்தம் எனக்கருதும்
இராமன் நுழைந்தான் என்பர். அழுகை உவகைக் கலுழ்ச்சி.            33

2620.'ஏழையும் இளவலும் வருக'
     என, இனிதா
வாழிய அவரொடும் வள்ளலும்
     மகிழ்வதால்,
ஊழியின் முதல்முனி
     உறையுளை அணுக,
ஆழியில் அறிதுயிலவன் என
     மகிழ்வான்.

    (சரபங்கர் இராமனை நோக்கி) ஏழையும் இளவலும் வருக என -
சீதையும் இலக்குவனும் வருகஎன்று வரவேற்க; இனிதா வாழிய
அவரொடும் வள்ளலும் மகிழ்வால் -
நன்றாக,வாழ்விற்குரிய
அவர்களொடு இராமனும் மகிழ்ச்சியால்; ஊழியின் முதல் முனி உறையுளை
அணுக -
பிரளய காலத்திற்கு முன்னம் இருந்த சரபங்கரின் வாழுமிடத்தைச்
சேர; ஆழியில்அறிதுயிலவன் என மகிழ்வான் - திருப்பாற் கடலில்
யோக நித்திரை கொள்ளும் திருமால்இவனே என்று தெளிந்து சரபங்க
முனிவர் களிப்பெய்தினார்.

     ஏழை - பெண்ணாம் சீதையைக் குறித்தது. இக்காண்டத்தில் 'மழைக்
கண் ஏழை' என வருவதும்காண்க (3316), சரபங்கர் இராமனைப் பாற்கடலில்
அறிதுயில் கொள்ளும் திருமால் என எண்ணிக்களித்தார். வாழிய என்பது
அசை நிலையுமாம்.                                            34

2621.அவ் வயின், அழகனும் வைகினன்-
     அறிஞன்
செவ்விய அற உரை
     செவிவயின் உதவ,
நவ்வியின் விழியவளொடு,
     நனி இருளைக்
கவ்விய நிசி ஒரு
     கடையுறும் அளவின்.