பக்கம் எண் :

650ஆரணிய காண்டம்

எண் திசை இறுதி ஆன உலகங்கள்
     இவற்றை, இன்னே,
கண்ட வானவர்களோடும் களையுமாறு,
     இன்று காண்டி.

    தனி ஒருத்திபெண் தன்னை - தனித்து (த் துணையின்றி) இருந்த
பெண் ஒருத்தியை; பேதை வாள் அரக்கன் - அறிவற்ற வாளேந்திய
அரக்கன்; பற்றிக் கொண்டனன் ஏக - பற்றிக் கொண்டு செல்ல; நீ இக்
கோளுற -
நீ இத்தகைய நிலையை அடைய; குலுங்கல் செல்லா -
நடுங்காது நின்ற (பேரவலம் கண்டும் வாளாயிருந்த); எண் திசை இறுதி
ஆன உலகங்கள் இவற்றை -
எட்டுத் திசைகளை எல்லையாகக் கொண்ட
உலகங்களாகிய இவற்றையெல்லாம்; கண்ட வானவர்களோடும் - (இச்
செயல்) கண்டு (எதுவும் செய்யாமல் வாளாவிருந்த) தேவர்களோடும்; இன்று
-
இன்றைக்கு; இன்னே - இப்பொழுதே; களையுமாறு - (நான்) முழுவதும்
அழித்தலை; காண்டி - நீ பார்ப்பாயாக என்றவாறு.

     இத்துணைக் கொடுமைகள் நடந்தும் நடுங்காத உலகையும், தடுக்காத
தேவர்களையும் இப்பொழுதே அழிப்பேன் நீ பார் என்று இராமன் சினந்து
சடாயுவிடம் கூறினான். கொண்டனன் - முற்றெச்சம், செல்லா - ஈறு கெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம்.                                      117

3520.'தாரகை உதிருமாறும், தனிக்
     கதிர் பிதிருமாறும்,
பேர் அகல் வானம் எங்கும்
     பிறங்கு எரி பிறங்குமாறும்,
நீரொடு நிலனும் காலும், நின்றவும்,
     திரிந்த யாவும்
வேரொடு மடியுமாறும்,
     விண்ணவர் விளியுமாறும்.

    தாரகை உதிருமாறும் - (என் வில்லாற்றலால்) விண்மீன்கள் உதிரும்
தன்மையையும்; தனிக் கதிர் பிதிருமாறும் - ஒப்பற்ற கதிரவன்
பொடியாகிச் சிதறும் தன்மையையும்; பேர் அகல் வானம் எங்கும் -
பெரிய அகன்ற வானம் முழுவதும்; பிறங்கு எரி பிறங்கு மாறும் -
விளங்குகின்ற நெருப்புப் பற்றி எரியும் தன்மையையும்; நீரொடு நிலனும்
காலும் -
நீரும் நிலமும் காற்றும்; நின்றவும் - (ஐம்பூதங்களில் மூன்றை
நீக்கி) நின்ற நெருப்பும் வானமும் (ஆகிய ஐம்பூதங்களும்); திரிந்த யாவும்
-
சரப் பொருள்களாய் உள்ள பிறயாவும்; வேரொடு மடியுமாறும் -
அடியோடு அழியும் தன்மையையும்; விண்ணவர் விளியுமாறும் -
தேவர்கள் அழியும் தன்மையையும்; காண் என.... (அடுத்த பாடலில்
இணையும்).