பக்கம் எண் :

சடாயு உயிர் நீத்த படலம் 659

இழந்து, மகனாகிய நான் யாது செய்வது என்று தெரியாமல் தடுமாறி
நிற்கிறேன் என்றவாறு. நின்றிலாத - எதிர்மறைப் பெயரெச்சம். தீர்ந்தேன்,
துறந்தனென் - முற்றெச்சங்கள்.                                 130

3533. என்றலும், இளைய கோ அவ் இராமனை
     இறைஞ்சி, 'யாண்டும்,
வென்றியாய்! விதியின் தன்மை
     பழியல விளைந்தது ஒன்றோ?
நின்று இனி நினைவது என்னே? நெருக்கி
    அவ் அரக்கர் தம்மைக்
கொன்றபின் அன்றோ, வெய்ய கொடுந்
     துயர் குளிப்பது?' என்றான்.

    என்றலும் - என்று இராமன் கூறிய உடனே; இளைய கோ -
இளையவனாகிய இலக்குவன்; அவ் இராமனை இறைஞ்சி - அந்த
இராமனை வணங்கி; வென்றியாய் - வெற்றியை உடையவனே; யாண்டும் -
எப்பொழுதும்; விதியின் தன்மை - ஊழ்வினையின் தன்மையால்; பழி அல
-
பழி தவிர; விளைந்தது ஒன்றோ - (ஒருவனுக்கு) வந்த தீமை (ஏதாவது)
உண்டோ?; இனி நின்று நினைவது என்னே - இனிமேல் நின்று (நீடு)
நினைப்பதற்கு என்ன காரணம் உள்ளது; அவ் அரக்கர் தம்மை நெருக்கி-
அந்த அரக்கர்களைப் (போரில்) நெருக்கிக்; கொன்ற பின் அன்றோ -
கொன்ற பிறகல்லவா?; வெய்ய கொடுந்துயர் குளிப்பது - மிகக் கொடிய
துன்பத்தில் மூழ்க வேண்டும்; என்றான் - (என்று இலக்குவன் இராமனிடம்)
கூறினான்.

     ஊழ்வினையால் மட்டுமே தீங்கு வரும். அத்தீங்கை நம்மால்
தடுத்தலும் ஒல்லாது. எனவே துயரப் பட்டுப் பலனில்லை. செய்ய
வேண்டுவது அரக்கரை நெருக்கி அழித்தலே என்றான் இலக்குவன்.
இப்பாடலில் அந்தாதி அமைப்பைக் காண்க.                        131

3534.'எந்தை! நீ இயம்பிற்று என்னை?
     எண்மையன் ஆகி, ஏழைச்
சந்த வார் குழலினாளைத்
     துறந்தனை தணிதியேனும்,
உந்தையை உயிர்கொண்டானை
     உயிருண்ணும் ஊற்றம் இல்லாச்
சிந்தையை ஆகிநின்று, செய்வது என்
     செய்கை?" என்றான்.

    எந்தை - என் தலைவனே; நீ எண்மையன் ஆகி - நீ எளிய
தன்மையன் ஆகி; ஏழைச் சந்தவார் குழலினாளை - பேதைமை உடைய