இலக்குவனைப் பார்த்து, 'இறந்த தந்தையாகிய சடாயுவுக்கு உரிய ஈமச் சடங்குகளைக் குறைவறச் செய்வோம்' என்றான். உரிமை - கடன்கள், சடங்குகள். 133 3536. | இந்தனம் எனைய என்ன கார் அகில் ஈட்டத்தோடும் சந்தனம் குவித்து, வேண்டும் தருப்பையும் திருத்தி, பூவும் சிந்தினன்; மணலின் வேதி தீது அற இயற்றி, தெண் நீர் தந்தனன்; தாதை தன்னைத் தடக் கையான் எடுத்துச் சார்வான், |
எனைய - எத்தன்மை உடைய; இந்தனம் என்ன - விறகுகள் என்று கண்டவர் வியக்கும் படி; கார் அகில் ஈட்டத் தோடும் - கரிய அகில் கட்டைகளின் தொகுதியுடன்; சந்தனம் குவித்து - சந்தனக் கட்டைகளையும் சேர்த்துக் குவித்து; வேண்டும் தருப்பையும் திருத்தி - தேவையான தருப்பைப் புற்களையும் திருத்தமாக அமைத்து; பூவும் சிந்தினன் - பூக்களையும் கொண்டு வந்து (சடாயுவின் மீது) தூவினான்; மணலின் வேதி தீது அற இயற்றி - (வேத முறைப்படி) மணலினால் மேடையைக் குற்றம் இல்லாமல் அமைத்து; தெண் நீர் தந்தனன் - தெளிந்த நீரினையும் கொண்டு வந்து சேர்த்து; தாதை தன்னை - (தன்) தந்தையாகிய சடாயு தன்னை; தடக்கையான் எடுத்து - பெரிய கைகளால் எடுத்துக் கொண்டு; சார்வான் - இறுதிச் சடங்கு செய்யப்படுதற்கு உரிய மணல் வேதிகைக்குச் சென்று சேர்ந்தான். இறுதிச் சடங்கு செய்தற்குரிய விறகு, தருப்பை, பூ, தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து வைத்து, அதற்காக மணல் மேடை அமைத்ததையும் இப்பாடல் விளக்குகிறது. இத்தனம் - விறகு, கார் - கரிய; மணலின் வேதி - மணல் மேடை, 134 3537. | ஏந்தினன் இரு கைதன்னால்; ஏற்றினன் ஈமம்தன்மேல்; சாந்தொடு மலரும் நீரும் சொரிந்தனன்; தலையின் சாரல் காந்து எரி கஞல மூட்டி, கடன் முறை கடவாவண்ணம் நேர்ந்தனன்-நிரம்பும் நல் நூல் மந்திர நெறியின் வல்லான். |
நிரம்பும் நல்நூல் மந்திர நெறியின் வல்லான் - நிறைந்த நல்ல நூல்களாகிய சாத்திரங்களின் முறையில் வல்லவனாகிய இராமன்; நீரும் சாந்தொடு மலரும் சொரிந்தனன் - நீரையும் சந்தனத்தையும் மலரையும் |