பக்கம் எண் :

674ஆரணிய காண்டம்

வஞ்ச வாயில் மதி
     என மட்குவாள்,
"வெஞ்சினம் செய் அரக்கர்
     தம் வெம்மையை
அஞ்சினான் கொல்?" என்று
     ஐயுறுமால்' என்பான்.

    நஞ்சு காலும் நகை நெடு நாகத்தின் - நஞ்சினை வெளிப்படுத்துகிற
பற்களை உடைய நீண்ட (இராகு என்னும்) பாம்பினது; வஞ்ச வாயில் மதி
என மட்குவாள் -
கொடிய வாயின் கண் பட்ட நிலவு போல் ஒளி
மழுங்கியவளான (சீதை); "வெஞ்சினம் செய் அரக்கர் தம் - கொடிய
சினத்தைச் செய்கிற அரக்கர்களுடைய; வெம்மையை அஞ்சினான் கொல்
-
கொடுமையான (வலிமைக்கு) அஞ்சினான், (தன்னை மீட்க வராமையால்)
போலும்"; என்று ஐயுறும் என்பான் - என்று ஐயப்படுவாள் என
எண்ணினான்.

     நாகத்தின் வாய்ப்பட்ட மதி தன் ஒளி குன்றுதல் போல் இராவணன்
வயப்பட்ட சீதை ஒளி குன்றினாள் என்றபடி. நாகத்தின் வஞ்ச வாயின்
பட்ட மதி இராவணன் கையகப்பட்ட சீதைக்கு உவமை. நாகம் -
இராவணன், மதி - சீதை. காலுதல் - வெளிப்படுத்தல், உமிழ்தல். நகை -
பல். மட்குவாள் - ஒளி மங்கிக் குறைவாள். கொல் - ஐயப்பொருள்
தருவதோர் இடைச் சொல், ஆல் - அசை.                         12

3553. பூண்ட மானமும், போக்க
     அருங் காதலும்,
தூண்ட நின்று, இடை
     தோமுறும் ஆர் உயிர்,
மீண்டு மீண்டு
     வெதுப்ப, வெதும்பினான்,
'வேண்டுமோ எனக்கு இன்னமும்
     வில்?' என்பான்.

    பூண்ட மானமும் - (இராவணன் சீதையைக் கவர்ந்ததால்) தனக்கு
ஏற்பட்ட அவமானமும்; போக்க அருங்காதலும் - (அவள் மீது கொண்ட)
நீக்க முடியாத காதலும்; தூண்ட - தூண்டுதலினால்; இடைநின்று -
நடுவில் நின்று; தோமுறும் - துன்பம் அடைகிற; ஆர் உயிர் - (தன்)
அருமையான உயிரை; மீண்டு மீண்டு வெதுப்ப - (அவை -
அவமானமும், காதலும்) மாறி மாறி வருத்துவதனால்; வெதும்பினான் -
மனம் வருந்தினவனாகிய (இராமன்); எனக்கு இன்னமும் வில்
வேண்டுமோ என்பான் -
எனக்கு இனிமேலும் (கையில்) வில்
வேண்டுமோ என்று கூறினான்.

     அவமானமும் காதலும் தேய் புரிப் பழங்கயிற்றைப் பற்றிய இரு
யானைகள் போலத் தன் உயிரை அலைக்கழித்தலால் பெருந்துன்பம்