பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 677

தீயும், அங்கு அவை; தீய்தலும்,
     செவ் இருந்து
ஆயும்; ஆவி
     புழுங்க அழுங்குமால்-
வாயும் நெஞ்சும்
     புலர மயங்குவான்.

    வாயும் நெஞ்சும் புலர மயங்குவான் - வாயும் மனமும் வறண்டு
மயக்கமுற்றவனாகிய (இராமன்); தம்பி திருத்திய தண் தளிர் சாயும் -
(தன்) தம்பியாகிய இலக்குவன் (தேடிப்படுப்பதற்காகத்) திருத்திய குளிர்ந்த
தளிர்க் குவியலில் சாய்ந்து படுப்பான்; அங்கு அவை - அப்பொழுது
அத்தளிர்கள்; தீயும் - (இராமனின் உடல் வெப்பத்தால்) தீய்ந்து போகும்;
தீய்தலும் - (அவ்வாறு அப்படுக்கையாகிய தளிர்கள்) தீய்ந்த உடனே;
செவ் இருந்து ஆயும் - சாயாது நேரே நிமிர்ந்து அமர்ந்து எண்ணுவான்;
ஆவி புழுங்க அழுங்கும் - உயிர் உருகிப் புழுங்கச் சோர்வான்.

     சீதையின் பிரிவால் வருந்தும் இராமனுக்கு இலக்குவன் தளிர்ப்
படுக்கையை அமைக்க, அதில் படுத்தவுடன் அத்தளிர்கள் தீய்ந்து
போனதால், அவன் நேரே நிமிர்ந்து அமர்ந்து பலவாறு எண்ணி உயிர்
உருகப் புழுங்கிச் சோர்ந்தான் என்க. ஆல் - அசை.                 17

3558.பிரிந்த ஏதுகொல்?
     பேர் அபிமானம்கொல்?
தெரிந்தது இல்லை; திரு
     மலர்க்கண் இமை
பொருந்த, ஆயிரம்
     கற்பங்கள் போக்குவான்;
இருந்தும் கண்டிலன்;
     கங்குலின் ஈறுஅரோ.

    திரு மலர்க்கண் இமை - அழகிய தாமரை மலர் போன்ற (தன்)
கண்களின் இமைகள், (இமைக்கும் காலத்தில்); ஆயிரம் கற்பங்கள்
பொருந்தப் போக்குவான் -
ஆயிரம் கற்பாந்த காலங்களை முழுதும்
பொருந்தக் கழிப்பவனாகிய (இராமன்); இருந்தும் கங்குலின் ஈறு
கண்டிலன் -
(தம்பியமைத்த தளிர்ப் படுக்கையில்) இருந்தும் இரவினது
முடிவைக் காணாதவனானான்; பிரிந்த ஏதுகொல் - (இந்நிலைமைக்குச்)
சீதையைப் பிரிந்தது காரணமோ?; பேர் அபிமானம் கொல் - (அவளிடம்
கொண்ட) பெருங்காதலாலா?; தெரிந்தது இல்லை - (உரிய காரணம்)
தெரியவில்லை.

     திருமலர்க்கண் இமைப்பில் ஆயிரம் கற்பங்கள் போக்கும்
இராமனுக்கு, சீதை பிரிவால் ஓர் இரவைக் கூடக் கழிக்க முடியவில்லை
என்றவாறு.