விளையாடி வருகிற பெண் யானையும் மதம் மிக்க ஆண் யானையும் (ஆகிய இவை); வருவ திரிவ பார்க்கின்றான் - (தன் எதிரே) வந்து திரிவதை இராமன் பார்க்கின்றான்; குயிலும் - குயிலின் குரலோசையும்; கரும்பும் - கரும்புச் சாற்று இனிமையும்; செழுந்தேனும் - முற்றிய தேனின் சுவையும்; குழலும் - குழலின் இசை இனிமையும்; யாழும் - யாழிசையின் இனிமையும்; கொழும்பாகும் - (முற்றக் காய்ச்சிய) கொழுமையான சர்க்கரைப் பாகின் சுவையும்; அயிலும் அமுதும் - (அனைவரும் விரும்பி) உண்ணும் அமுதத்தின் சுவையும்; சுவை தீர்த்த - (ஆகிய இவற்றின் சுவையையும் இனிமையையும்) தன் குரல் இனிமைக்கு முன் இனிமையே இல்லை என்று தீர்த்த; மொழியைப் பிரிந்தான் - இனிய சொல்லை உடைய சீதையைப் பிரிந்தவனாகிய இராமன்; அழியானோ - வருத்தப்படாமல் இருப்பானோ. காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன் என்பது போல் இணையாக இராமன் முன் திரிந்த மயில், மான், களிறு ஆகியவை அவனது பிரிவுத் துயரத்தை மிகுவித்தன என்றபடி. கலை - ஆண்மான், பிடி - பெண் யானை கடகளிறு - மதம் மிக்க ஆண் யானை. மொழி - முதலாகு பெயர். சீதையின் பேச்சினிமையைக் கூறும் பகுதியின் சிறப்பை எண்ணுக. குயில், கரும்பு, குழல், யாழ் - இனிமையும் சுவையும் குறித்து வந்தன. பண்பாகு பெயர்கள். 29 | 3570. | முடி நாட்டிய கோட்டு உதயத்து முற்றம் உற்றான் - முது கங்குல் விடி நாள் கண்டும், கிளி மிழற்றும் மென் சொல் கேளா வீரற்கு, 'ஆண்டு, அடிநாள், செந் தாமரை ஒதுங்கும் அன்னம் இலளால், யான் அடைத்த கடி நாள் கமலத்து' என அவிழ்த்துக் காட்டுவான்போல், கதிர் வெய்யோன். |
கதிர் வெய்யோன் - கதிர்களை உடைய கதிரவன்; முது கங்குல் விடி நாள் கண்டும் - நீண்டிருந்த இரவு (முடிந்து தோன்றிய) பகல் பொழுதைப் பார்த்தும்; கிளி மிழற்றும் மென் சொல்கேளா - கிளி போல் பேசுகிற (சீதையின்) இனிய சொல்லைக் கேட்காத; வீரற்கு - வீரனாகிய இராமனுக்கு; ஆண்டு - அப்பொழுது; யான் அடைத்த கடிநாள் கமலத்து - (யான்) முதல் நாளில் மூடிய மணம் மிக்க தாமரை மலரில்; அடிநாள் செந்தாமரை ஒதுங்கும் அன்னம் - முற்காலத்துத் தாமரை மலரில் தோன்றிய அன்னப் பறவை போன்ற சீதை; இலன் - (இப்போது என்னிடம்) இல்லை; என - என்று; அவிழ்த்துக் காட்டுவான் போல் - விரித்துக் காட்டுபவன் போல்; முடி நாட்டிய கோட்டு உதயத்து - முடி நாட்டியது போல் அமைந்த உச்சியை உடைய உதய கிரியில்; முற்றம் உற்றான் - முழுமையாக விளங்கித் தோன்றினான். ஆல் - ஈற்றசை. |