பக்கம் எண் :

686ஆரணிய காண்டம்

'சொன்ன அரக்கன் இருக்கும் இடம்
     துருவி அறிதும் தொடர்ந்து' என்ன,
மின்னும் சிலையார் மலை தொடர்ந்த
     வெயில் வெங் கானம் போயினரால்.

    இள வீரன் - இளைய வீரனாகிய இலக்குவன்; அன்ன காலை -
அப்பொழுது; அடியின் வணங்கி - (இராமனது) அடிகளில் வணங்கி;
'நெடியோய் - (புகழில்) பெரியவனே; அப்பொன்னை நாடாது - அந்தச்
சீதையைத் தேடாமல்; ஈண்டு இருத்தல் புகழோ - இவ்வாறு இங்கு
(வீணாக) இருப்பது புகழைத் தரும் செயலோ?'; என்ன - என்று கூற;
புகழோனும் - புகழ் மேம்பட்ட இராமனும்; 'சொன்ன அரக்கன் - (சடாயு)
சொல்லிய அரக்கன்; இருக்கும் இடம் - இருக்கின்ற இடத்தைத்;
தொடர்ந்து துருவி அறிதும் - (நாம்) தொடர்ந்து சென்று தேடிக்
காண்போம்; என்ன - என்று சொல்ல; மின்னும் சிலையார் - (அதற்குப்
பிறகு) ஒளி பொருந்திய வில்லைக் கையில் ஏந்திய வீரர்களான
இராமலக்குவர்கள் (இருவரும்); மலை தொடர்ந்த வெயில் வெங்கானம் -
மலைகள் தொடர்ச்சியாக அமைந்த வெயிலால் வெப்பமடைந்த காட்டு
(வழியில்); போயினர் - சென்றார்கள்.

     ஆல் - அசை.                                          32

கலி விருத்தம்

3573. ஆசை சுமந்த நெடுங் கரி அன்னார்
பாசிலை துன்று வனம் பல பின்னா,
காசு அறு குன்றினொடு ஆறு கடந்தார்;
யோசனை ஒன்பதொடு ஒன்பது சென்றார்.

    ஆசை சுமந்த நெடுங்கரி அன்னார் - திசைகளைத் தாங்குகிற
பெரிய திசை யானைகளை ஒத்தவர்களாகிய இராமலக்குவர்; பாசிலை
துன்று வனம் பல பின்னா -
பசிய இலைகள் நெருங்கிய காடுகள் பல
பின்னாக (நடந்து சென்று); காசு அறு குன்றினோடு - குற்றம் இல்லாத
மலைகளையும்; ஆறு கடந்தார் - ஆறுகளையும் கடந்தவர்களாகி;
ஒன்பதொடு ஒன்பது யோசனை சென்றார் - பதினெட்டு யோசனை
(தூரம்) சென்றார்கள்.

     இராமலக்குவர் நடந்து சென்று பதினெட்டு யோசனை தூரம்கடந்தனர்
என்க. ஆசை - திசை. துன்றுதல் - நெருங்குதல்; காசு - குற்றம்.அன்னார்-
குறிப்பு வினையாலணையும் பெயர். பாசிலை - பண்புத்தொகை. கடந்தார் -
முற்றெச்சம்.                                                  33

3574. மண்படி செய்த தவத்தினில் வந்த
கள் படி கோதையை நாடினர், காணார்,