| | உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க, புள் படியும் குளிர் வார் பொழில் புக்கார். |
மண்படி செய்த தவத்தினில் - (அவர்கள்) மண்ணுலகு செய்த தவத்தினால்; வந்த - (அதனிடமிருந்து) வந்த; கள் படி கோதையை - தேன் பொருந்திய மாலையை அணிந்த சீதையை; நாடினர் காணார் - தேடிக் காணாதவர்களாகி; உள் படி கோபம் உயிர்ப்பொடு பொங்க - மனத்தில் படிந்திருந்த சினம் பெருமூச்சோடு (பொங்கி) வெளிப்பட; புள் படியும் குளிர் வார் பொழில் - பறவைகள் தங்குகிற குளிர் (மிகுந்த) பெரிய சோலையின் கண்; புக்கார் - புகுந்தார்கள். இராமலக்குவர் சீதையைத் தேடிக் காணாமல் சினமும் பெருமூச்சும் வெளிப்பட ஒரு சோலைக் கண் சென்று தங்கினர் என்பதாம். மண் படி - மண்ணுலகு. வார் - நீண்ட, பெரிய. காணார் - முற்றெச்சம். 34 | 3575. | ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான்; நாரியை எங்கணும் நாடினன்; நாடி, பேர் உலகு எங்கும் உழன்று, இருள் பின்னா, மேருவின் - வெங் கதிர் - மீள மறைந்தான். | வெங்கதிர் - வெப்பமான கதிர்களை உடைய கதிரவன்; ஆரியர் சிந்தை அலக்கண் அறிந்தான் - வீரர்களாகிய (அந்த) இராமலக்குவரது மனத் துன்பத்தை அறிந்து; நாரியை எங்கணும் நாடினன் நாடி - பெண்ணாகிய சீதையை எங்கும் (துருவித்) தேடிப் பார்த்து; பேர்உலகு எங்கும் உழன்று - (இந்தப்) பெரிய நிலவுலகு முழுவதும் அலைந்து திரிந்து; மேருவின் மீள இருள் பின்னா மறைந்தான் - மேரு மலையில் மறுபடியும் தனக்குப் பின் இருள் தொடரும் படி சென்று மறைந்தான். உலகம் முழுதும் சீதையை தேடி அலுத்த கதிரவன் உலகுக்கு அப்புறம் போயும் தேடுவான் போலத் தனக்குப் பின் இருள் தொடருமாறு மேரு மலையில் மறைந்தான். ஆரியர் - வீரர், அறிவுடையவர், பெரியோர் எனினுமாம். அலக்கண் - துன்பம், நாரி - பெண்; ஈண்டுச் சீதை. அறிந்தான் - முற்றெச்சம். வெங்கதிர் - பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. 35 | 3576. | அரண்டு, அருகும் செறி அஞ்சன புஞ்சம் முரண்டனபோல், இருள் எங்கணும் முந்த, தெருண்ட அறிவில்லவர் சிந்தையின் முந்தி, இருண்டன, மாதிரம் எட்டும் இரண்டும். |
செறி அஞ்சன புஞ்சம் - அடர்ந்த மையின் திரட்சி; அரண்டு - அஞ்சி; அருகும் முரண்டன போல் - (இரு) பக்கங்களிலும் வளைத்துக் கொண்டன போல; எங்கணும் இருள் முந்த - எல்லாப் பக்கங்களிலும் இருள் சூழ; தெருண்ட அறிவில்லவர் - தெளிவில்லாத அறிவில்லாதவர்களுடைய; |