பக்கம் எண் :

அயோமுகிப் படலம் 689

தெவ் இடை வில்லவனும்
     தனி சென்றான்.

    அவ் இடை எய்திய - அந்த இடத்திற்குச் சென்று தங்கிய;
அண்ணல் இராமன் - தலைவனாகிய இராமன்; வெவ் விடைபோல்
இளவீரனை -
வலிமையுள்ள காளை போன்ற இளைய வீரனாகிய
இலக்குவனைப் (பார்த்து); வீர - வீரனே; இவ் இடை நீர் நாடினை
கொணர்க -
இவ்விடத்தில் தண்ணீரைத் தேடிக் கொண்டு வருவாய்;
என்றான் - என்று கூறினான்; தெவ் இடை வில்லவனும் தனி சென்றான்
-
(அது கேட்ட) பகைவர் பின்னிடக் காரணமாகிய வில்லை உடைய
இலக்குவனும் தனியே (இராமனைப் பிரிந்து) போனான்.

     சீதையைப் பிரிந்து இராமன் மாயமானின் பின் சென்றது போல
இராமனுக்கு நீர் கொண்டுவர அவனைப் பிரிந்து இலக்குவன் தனியே
சென்றான் என்க. இடை - இடம். விடை, வலிமை நடை, செருக்கு
ஆகியவற்றால் இலக்குவனுக்கு உவமை. தெவ் - பகை. நாடினை -
முற்றெச்சம், கொணர்க - வியங்கோள் வினைமுற்று. தெவ் - பண்பாகு
பெயர்.                                                    38

இலக்குவனைக் கண்டு அயோமுகி காமுறல்

3579. எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்;
சிங்கம் எனத் தமியன் திரிவானை,
அங்கு, அவ் வனத்துள், அயோமுகி என்னும்
வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள்.

    நீர் எங்கணும் நாடினன் இடை காணான் - தண்ணீரை
எல்லாவிடத்திலும் தேடி அவ்விடத்தில் காணாதவனாகி; சிங்கம் எனத்
தமியன் திரிவானை -
சிங்கம் போலத் தனியாகத் திரிகின்றவனாகிய
இலக்குவனை; அங்கு அவ்வனத்துள் - அப்பொழுது அந்தக் காட்டில்
(உள்ள); அயோமுகி என்னும் - அயோமுகி என்ற பெயர் கொண்ட;
வெங்கண் அரக்கி - கொடிய கண்களை உடைய அரக்கியாகியவள்;
விரும்பினள் கண்டாள் - ஆசை கொண்டு பார்த்தாள்.

     காட்டில் தனியே நீர் தேடிச் சென்ற இலக்குவனை அயோமுகி ஆசை
கொண்டு பார்த்தாள். அயோமுகி - இரும்பு போன்ற முகம் உடையவள்.
காணான், விரும்பினள் - முற்றெச்சங்கள். திரிவானை - வினையாலணையும்
பெயர். வெங்கண் - பண்புத் தொகை.                            39

3580. நல் மதியோர் புகல் மந்திர நாமச்
சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள்
தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்;
'மன்மதன் ஆம் இவன்' என்னும் மனத்தாள்.

    நல் மதியோர் புகல் - நல்ல அறிவுடையவர்கள் சொல்லுகிற; நாம
மந்திரச் சொல் -
அச்சம் தருகிற மந்திரச் சொற்களை; மதியா - மதித்துக்