| | தெவ் இடை வில்லவனும் தனி சென்றான். |
அவ் இடை எய்திய - அந்த இடத்திற்குச் சென்று தங்கிய; அண்ணல் இராமன் - தலைவனாகிய இராமன்; வெவ் விடைபோல் இளவீரனை - வலிமையுள்ள காளை போன்ற இளைய வீரனாகிய இலக்குவனைப் (பார்த்து); வீர - வீரனே; இவ் இடை நீர் நாடினை கொணர்க - இவ்விடத்தில் தண்ணீரைத் தேடிக் கொண்டு வருவாய்; என்றான் - என்று கூறினான்; தெவ் இடை வில்லவனும் தனி சென்றான் - (அது கேட்ட) பகைவர் பின்னிடக் காரணமாகிய வில்லை உடைய இலக்குவனும் தனியே (இராமனைப் பிரிந்து) போனான். சீதையைப் பிரிந்து இராமன் மாயமானின் பின் சென்றது போல இராமனுக்கு நீர் கொண்டுவர அவனைப் பிரிந்து இலக்குவன் தனியே சென்றான் என்க. இடை - இடம். விடை, வலிமை நடை, செருக்கு ஆகியவற்றால் இலக்குவனுக்கு உவமை. தெவ் - பகை. நாடினை - முற்றெச்சம், கொணர்க - வியங்கோள் வினைமுற்று. தெவ் - பண்பாகு பெயர். 38 இலக்குவனைக் கண்டு அயோமுகி காமுறல் | 3579. | எங்கணும் நாடினன்; நீர் இடை காணான்; சிங்கம் எனத் தமியன் திரிவானை, அங்கு, அவ் வனத்துள், அயோமுகி என்னும் வெங் கண் அரக்கி விரும்பினள் கண்டாள். |
நீர் எங்கணும் நாடினன் இடை காணான் - தண்ணீரை எல்லாவிடத்திலும் தேடி அவ்விடத்தில் காணாதவனாகி; சிங்கம் எனத் தமியன் திரிவானை - சிங்கம் போலத் தனியாகத் திரிகின்றவனாகிய இலக்குவனை; அங்கு அவ்வனத்துள் - அப்பொழுது அந்தக் காட்டில் (உள்ள); அயோமுகி என்னும் - அயோமுகி என்ற பெயர் கொண்ட; வெங்கண் அரக்கி - கொடிய கண்களை உடைய அரக்கியாகியவள்; விரும்பினள் கண்டாள் - ஆசை கொண்டு பார்த்தாள். காட்டில் தனியே நீர் தேடிச் சென்ற இலக்குவனை அயோமுகி ஆசை கொண்டு பார்த்தாள். அயோமுகி - இரும்பு போன்ற முகம் உடையவள். காணான், விரும்பினள் - முற்றெச்சங்கள். திரிவானை - வினையாலணையும் பெயர். வெங்கண் - பண்புத் தொகை. 39 | 3580. | நல் மதியோர் புகல் மந்திர நாமச் சொல் மதியா அரவின் சுடர்கிற்பாள் தன் மதனோடு தன் வெம்மை தணிந்தாள்; 'மன்மதன் ஆம் இவன்' என்னும் மனத்தாள். |
நல் மதியோர் புகல் - நல்ல அறிவுடையவர்கள் சொல்லுகிற; நாம மந்திரச் சொல் - அச்சம் தருகிற மந்திரச் சொற்களை; மதியா - மதித்துக் |