3588. | நீள் அரவச் சரி, தாழ் கை, நிரைத்தாள்; ஆள் அரவப் புலி ஆரம் அணைத்தாள்; யாளியினைப் பல தாலி இசைத்தாள்; கோள் அரியைக் கொடு தாழ் குழை இட்டாள்; |
நீள் அரவச் சரி - நீண்ட பாம்புகளாகிய வளையலை; தாழ்கை நிரைத்தாள் - நீண்ட கையில் வரிசையாக அணிந்தவள்; அரவ ஆள் புலி ஆரம் அணைத்தாள் - உறுமுகிற ஆண்புலிகளைக் (கோத்து) ஆரமாக அணிந்தவள்; பல யாளியினைத் தாலி இசைத்தாள் - பல யாளிகளைக் (கோத்துத்) தாலியாகக் கட்டியவள்; கோள் அரியைக் கொடு தாழ் குழை இட்டாள் - கொள்ளும் (வலிய) சிங்கங்களைக் கொண்டு தாழ்ந்த காதணியாக அணிந்தவள். 48 அயோமுகியை இலக்குவன் கண்டு வினவல் 3589. | நின்றனள், ஆசையின் நீர் கலுழும் கண் குன்றி நிகர்ப்ப, குளிர்ப்ப விழிப்பாள், மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால், கன்று இருளில் திரி கோளரி கண்டான். |
குன்றி நிகர்ப்ப - குன்றி மணியை ஒத்துள்ள; ஆசையின் நீர் கலுழும் கண் - காம நோயால் (சிவந்த) நீர் ஒழுகும் கண்களின் மூலம்; குளிர்ப்ப விழிப்பாள் - குளிர்ச்சியாக நோக்குபவள் ஆகிய அயோமுகி; நின்றனள் - நின்றாள்; கன்று இருளில் திரி கோளரி - செறிந்த இருட்டில் திரிகின்ற சிங்கம் போன்ற இலக்குவன்; மின் திரிகின்ற எயிற்றின் விளக்கால் - ஒளி வீசுகின்ற அவள் பற்களின் ஒளியாகிய விளக்கினால்; கண்டான் - (அந்த அயோமுகியைக்) கண்டான். சிவந்த குன்றி நிகர்க்கும் கண்களால் காதல் கலந்த குளிர் பார்வை பார்த்துக் கொண்டு நின்றாள். இருளில் வலிய சிங்கம் போல் திரிந்த இலக்குவன், அவளது ஒளி வீசுகின்ற பற்களாகிய விளக்கின் ஒளியால் அந்த அயோமுகியைக் கண்டான். முன்பாட்டில் வெப்பக் கனலே உருவான அரக்கியைக் காட்டி, அந்த வெப்பக் கொடுமையே குளிர்வதாக இங்கே காட்டுகிறார். இயல்பான வெம்மை காம வெறியால் குளிர்ப்ப விழிக்கச் |