பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 7

     (விராதன் வருகையினால்); புக்க வாள் அரி - புகுந்த ஒளியுடைய
சிங்கங்கள்; முழங்கு - முழக்கு; செவியின் பொறிஉற - காதுகளில்
பொருந்த; பக்கம் மின்னும்- எல்லாப் பக்கங்களிலும் ஒளி வீசும்;
மணிமேருசிகரம் - இரத்தினம் பொருந்தியமேருமலையின் முகடு;
குழைபட -
குளிர்ந்து கெட, எதிர் உற்ற செருவத்து - எதிர்ப்பட்ட
போரில்; உக்க வீரர் உதிரத்தின் - வீழ்ந்த வீரரின் இரத்தத்தால்; செக்கர்
வான்மழை நிகர்க்க -
செவ்வான மேகம் போல; ஒளிர் செச்சையினொடு-
விளங்கும் செஞ்சந்தனப் பூச்சுடனே; ஏ - அசை.

     சிங்கங்களின் செவியின் பொறி புக்கு உக என்றும் கூறுவர், விராதன்
செவி மலைக்குகைபோல் இருந்தன என்பதாம். அவனுடைய கரிய தோளில்
பூசிய சிவந்த இரத்தப் பூச்சு செவ்வானமேகம் போன்றது.              8

2525. படையொடு ஆடவர்கள், பாய் புரவி,
     மால் களிறு, தேர்,
நடைய வாள் அரிகள், கோள்
     உழுவை, நண்ணியஎலாம்
அடைய வாரி, அரவால் முடி,
     அனேக வித, வன்
தொடையல் மாலை துயல்வந்து உலவு
     தோள் பொலியவே.

    படையொடு ஆடவர்கள் - போர்க் கருவி ஏந்திய வீரர்கள்; பாய்
புரவி -
தாவிப்பாயும் குதிரைகள்; மால்களிறு - பெரிய மத யானைகள்,
தேர் - தேர்கள்;நடைய - உலாவும்; வாள் அரிகள் - ஒளியுடைய
சிங்கங்கள்; கோள் உழுவை -உயிரைக் கொள்வதைத் தொழிலாகக்
கொண்ட புலிகள்; நண்ணிய எலாம் - இவ்வாறுதன்னை அடைந்த
யாவற்றையும்; அடைய வாரி - முழுவதும் வாரிக் கொண்டு வந்து, அரவால்
முடி -
பெரிய பாம்பால் தொகுத்துக்கட்டிய; அனேக வித வன் தொடையல்
மாலை -
பலவிதமான, வலிதாகத் தொடுக்கப்பட்ட மாலைகள்; துயல்வந்து -
தொங்கி அசையும், உலவு தோள் - விசாலமான தோள்கள்; பொலிய -
விளங்க, ஏ - அசை.

     ‘படையொடு... தேர்’ என நாற்படையும் வந்தன. வாரி என்றதால்
எளிமையாக அள்ளி எடுத்தமைபுலனாம்                            9

2526.குன்று துன்றின எனக் குமுறு
     கோப மதமா
ஒன்றின் ஒன்று இடை அடுக்கின
     தடக் கை உதவ,
பின்றுகின்ற பிலனின் பெரிய
     வாயின்ஒரு பால்