| வாடும்வகை சோரும்; மயங்குறுமால் - ஆடும் களி மா மத யானை அனான். |
ஆடும் களிமாமத யானை அனான் - பகைவரை அழிக்கும் செருக்குடைய மிக்க மதத்தை உடையதுமாகிய யானையை ஒத்தவனாகிய இராமன்; பல சூழல்கள் தோறும் நடந்து நாடும் - பல இடங்களிலும் சென்று தம்பியைத் தேடுவான்; பெயர் சொல்லி உளைந்து ஓடும் - இலக்குவன் பெயரைச் சொல்லி வருந்தி விரைந்து ஓடுவான்; உயிர்போய் வாடும் வகை சோரும் - உயிர் போய் வாடும் வகையாகத் தளர்வான்; மயங்குறுமால் - மயக்கமடைவான். இராமன் தம்பியைத் தேடி அலைந்தமை கூறுகிறார் ஆல் -அசை. ஆடு - அடு என்பது முதல் நிலை நீண்ட தொழிற் பெயர்.மாமதம் - உரிச்சொல் தொடர். மத யானை இரண்டாம் வேற்றுமைஉருபும் பயனும் உடன் தொக்க தொகை. அனான் - குறிப்புவினையாலணையும் பெயர். 75 3616. | கமையாளொடும் என் உயிர் காவலில் நின்று இமையாதவன், இத் துணை தாழ்வுறுமோ? சுமையால் உலகூடு உழல்தொல் வினையேற்கு, அமையாதுகொல் வாழ்வு? அறியேன்' எனுமால். |
கமையாளொடும் - பொறுமை உடையவளாகிய சீதையுடன்; என் உயிர் - எனது உயிரையும்; காவலில் நின்று - காக்கும் தொழிலில் (ஊன்றி) நின்று; இமையாதவன் - கண்ணிமைக்காமல் இருந்த இலக்குவன்; இத்துணை தாழ்வுறுமோ - (என்னை விட்டுப் பிரிந்து) இத்துணை காலம் தாழ்த்துவானா?; சுமையால் உலகூடு உழல் தொல் வினையேற்கு - சுமையாக உலகத்தில் இருந்து வருந்துகிற பழைய வினையை உடைய எனக்கு; வாழ்வு அமையாது கொல் - (உயிருடன் கூடி வாழும்) வாழ்க்கை அமையாது போலும்; அறியேன்' எனுமால் - அறியேன் என்று (இராமன்) கூறினான். 'என்னையும் சீதையையும் கண் இமைக்காது காத்த இலக்குவன் இவ்வளவு நேரம் வராமல் இருப்பானா? இருக்க மாட்டான். உலகத்தில் பழியினை நுகர்ந்து வருந்தும் நான் உயிரோடு வாழ முடியாது போலும்' என இராமன் எண்ணினான். சுமையாள் - பொறுமை உடையவள் ஈண்டுச் சீதையைக் குறித்தது. சுந்தர காண்டத்தில் "கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக்கவ்வி (5078) |