பக்கம் எண் :

710ஆரணிய காண்டம்

வாடும்வகை
     சோரும்; மயங்குறுமால் -
ஆடும் களி மா மத
     யானை அனான்.

    ஆடும் களிமாமத யானை அனான் - பகைவரை அழிக்கும்
செருக்குடைய மிக்க மதத்தை உடையதுமாகிய யானையை
ஒத்தவனாகிய இராமன்; பல சூழல்கள் தோறும் நடந்து நாடும் -
பல இடங்களிலும் சென்று தம்பியைத் தேடுவான்; பெயர் சொல்லி
உளைந்து ஓடும் -
இலக்குவன் பெயரைச் சொல்லி வருந்தி விரைந்து
ஓடுவான்; உயிர்போய் வாடும் வகை சோரும் - உயிர் போய்
வாடும் வகையாகத் தளர்வான்; மயங்குறுமால் - மயக்கமடைவான்.

     இராமன் தம்பியைத் தேடி அலைந்தமை கூறுகிறார் ஆல் -அசை.
ஆடு - அடு என்பது முதல் நிலை நீண்ட தொழிற் பெயர்.மாமதம் -
உரிச்சொல் தொடர். மத யானை இரண்டாம் வேற்றுமைஉருபும் பயனும்
உடன் தொக்க தொகை. அனான் - குறிப்புவினையாலணையும் பெயர்.   75

3616. கமையாளொடும் என் உயிர்
     காவலில் நின்று
இமையாதவன், இத்
     துணை தாழ்வுறுமோ?
சுமையால் உலகூடு
     உழல்தொல் வினையேற்கு,
அமையாதுகொல் வாழ்வு?
     அறியேன்' எனுமால்.

    கமையாளொடும் - பொறுமை உடையவளாகிய சீதையுடன்;
என் உயிர் - எனது உயிரையும்; காவலில் நின்று - காக்கும்
தொழிலில் (ஊன்றி) நின்று; இமையாதவன் - கண்ணிமைக்காமல்
இருந்த இலக்குவன்; இத்துணை தாழ்வுறுமோ - (என்னை விட்டுப்
பிரிந்து) இத்துணை காலம் தாழ்த்துவானா?; சுமையால் உலகூடு
உழல் தொல் வினையேற்கு -
சுமையாக உலகத்தில் இருந்து
வருந்துகிற பழைய வினையை உடைய எனக்கு; வாழ்வு அமையாது
கொல் -
(உயிருடன் கூடி வாழும்) வாழ்க்கை அமையாது போலும்;
அறியேன்' எனுமால் - அறியேன் என்று (இராமன்) கூறினான்.

     'என்னையும் சீதையையும் கண் இமைக்காது காத்த இலக்குவன்
இவ்வளவு நேரம் வராமல் இருப்பானா? இருக்க மாட்டான். உலகத்தில்
பழியினை நுகர்ந்து வருந்தும் நான் உயிரோடு வாழ முடியாது
போலும்' என இராமன் எண்ணினான். சுமையாள் - பொறுமை
உடையவள் ஈண்டுச் சீதையைக் குறித்தது. சுந்தர காண்டத்தில்

     "கமையினாள் திரு முகத்து அயல் கதுப்பு உறக்கவ்வி (5078)