2632. | மலைகளும், மரங்களும், மணிக் கற்பாறையும், அலை புனல் நதிகளும், அருவிச் சாரலும், இலை செறி பழுவமும், இனிய சூழலும், நிலை மிகு தடங்களும், இனிது நீங்கினார். |
மலைகளும் - பல மலைகளையும்; மரங்களும் - பல மரங்களையும்; மணிக்கற்பாறையும் - அழகியகற்பாறைகள் நிறைந்த இடங்களையும்; அலை புனல் நதிகளும் - அலைகளோடு கூடிய நீர் மிக்கஆறுகளையும்; அருவிச் சாரலும் - நீர் அருவி பாயும் மலைப் பக்கங்களையும்; இலை செறிபழுவமும் - இலைகள் அடர்ந்த சோலைகளையும்; இனிய சூழலும் - இனிமையாய் விளங்கியஇடங்களையும்; நிலை மிகு தடங்களும் - ஆழம் மிகுந்த நீர்நிலைகளையும்; இனிதுநீங்கினார் - இனிமையாகக் கடந்து சென்றனர். மலைகள் முதலிய இனிய சூழல் பலவும் இராமன் முதலியவர்களுக்குத் தோற்றத்தால் கண்ணுக்குஇனிமையும் வாழ்தற்கு மகிழ்ச்சியும் அளித்தமையால் நடந்து சென்ற வருத்தம் தெரியாமல்காட்சிகளில் இனிமை கண்டு மகிழ்ந்தனர். பழுவம் - காடு, கல்லதரத்தமுமாம் (சீவக. 1185)சூழல் - தவச்சாலைகளுமாம், நிலை - பரப்பு. 2 இராமன் தண்டக வனத்திற்கு வர, முனிவர்கள் மகிழ்தல் 2633. | பண்டைய அயன் தரு பாலகில்லரும், முண்டரும், மோனரும், முதலினோர்கள் அத் தண்டக வனத்து உறை தவத்துளோர் எலாம் கண்டனர் இராமனை, களிக்கும் சிந்தையார். |
பண்டைய அயன் தரு பால கில்லரும் - முதன் முதலில் தோன்றிய பழமையான பிரமதேவன் பெற்றவர்களாகிய பாலகில்லரும்; முண்டரும் - மழித்த தலையை உடையவர்களும்; மோனரும் - மௌன விரதம் பூண்டவர்களும்; முதலினோர்கள் - முதலியவர்களாகிய; அத்தண்டக வனத்துறை தவத்துளோர் எலாம் - அந்தத் தண்டகாரணியம் எனும் காட்டில் வாழ்கின்ற முனிவர்கள் எல்லாம்; இராமனைக்கண்டனர் களிக்கும் |