பக்கம் எண் :

726ஆரணிய காண்டம்

தொடர்பு நோக்கி 'எய்தியதனால்' எனப் பொருள் கொள்ளப்பட்டது.
ஐம்பூதங்களினும் பெரிதாகிய (பிரிவுத்) துன்பம் வந்தால், கொடிய
கங்குல் சீதை கண்ணினும் நெடியதாக இராமனுக்குத் தோன்றுகிறது.       99

3640.'அப்புடை அலங்கு மீன்
     அலர்ந்ததாம் என -
உப்புடை இந்து என்று
     உதித்த ஊழித் தீ,
வெப்புடை விரி கதிர்
     வெதுப்ப - மெய் எலாம்
கொப்புளம் பொடித்ததோ,
     கொதிக்கும் வானமே?'

    'உப்புடை இந்து என்று - அழகு உடைய நிலவு என்று;
உதித்த ஊழித் தீ - (வானத்தில் உதித்த) ஊழித் தீயினுடைய;
வெப்புடை விரிகதிர் வெதுப்ப - வெபபம் உடைய விரிந்த கதிர்கள்
சுட; மெய் எலாம் - (தன்) உடம்பில் எல்லாம்; அப்புடை அலங்கு
மீன் -
நீரோட்டம் உடைய விளங்குகிற மீன்கள்; அலர்ந்ததாம் என
-
விளங்கினதாம் என்பது; கொதிக்கும் வானம் - (இந்து எனும்
ஊழித் தீயினால்) கொதிக்கின்ற வானம்; கொப்புளம் பொடித்ததோ -
கொப்புளங் கொண்டதோ? எனுமாறு விளங்கியது'.

     இந்து என்கிற ஊழித் தீயினால் வெப்பமடைந்த வானம்
கொப்புளம் கொண்டது போல் அதில் மீன்கள் விளங்கின என்றவாறு.
அப்பு - நீர், உப்பு - இனிமை, அழகு. இந்து - நிலவு. அலங்குதல் -
விளங்குதல்.                                                100

3641. இன்னன இன்னன பன்னி,
     ஈடு அழி
மன்னவர் மன்னவன்
     மதி மயங்கினான்;
அன்னது கண்டனன்,
     அல்கினான் என,
துன்னிய செங் கதிர்ச்
     செல்வன் தோன்றினான்.

    இன்னன இன்னன பன்னி - இவ்வாறாகப் பல சொற்களைப்
பல முறை கூறி; ஈடு அழி மன்னவர் மன்னவன் - வலிமை
ஒடுங்கிய பேரரசனாகிய இராமன்; மதிமயங்கினான் - அறிவு
கலங்கினான்; துன்னிய செங்கதிர்ச் செல்வன் - (அவனது பிரிவுத்
துயர் கண்ட) சிவந்த கதிர்களை உடைய கதிரவன்; அன்னது
கண்டனன் -
(அவனது) அத் தன்மையைக் கண்டனனாகி;
அல்கினான் என - (இவன்) மிக மெலிந்தான் என்று எண்ணி;
தோன்றினான் - (அவலத் துயர் துடைக்கத் தோன்றியவன் போலத்)
தோன்றினான்.