பக்கம் எண் :

764ஆரணிய காண்டம்

யெல்லாம்; அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் -
அழிப்பதற்கென்றே ஒப்பற்றவனாய் உள்ள சிவபிரான்கூட; ஒழிப்ப
அருந் திறல் -
அழிப்பதற்கரிய ஆற்றல் கொண்ட; பல் பூத
கணத்தொடும் -
பல பூதங்களின் கூட்டத்துடன்; உறையும் உண்மை
அறிதிர் அன்றே -
சேர்ந்திருக்கும் உண்மையை நீங்கள்
அறிந்திருக்கிறீர்கள் அன்றோ.

     அண்ணலும் - உயர்வு சிறப்பும்மை. அழிப்பதற்கென்றே தனிப்
பெருந்திறனாளனாகிய சிவபிரானே பூதகணங்களின் உதவியைப்
பெற்றிருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டி, இராமலக்குவர்கள்
துணை வலி நாட வேண்டும் என்பதைக் கவந்தன் வற்புறுத்துகிறான்.     53

3696.'ஆயது செய்கை என்பது, அறத்துறை
     நெறியின் எண்ணி
தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச்
     சேர்த்து, செய்தல்;
தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத்
     தலைப்பட்டு, அன்னாள்
ஏயது ஓர் நெறியின் எய்தி,
     இரலையின் குன்றம் ஏறி,

    'அறத்துறை நெறியின் எண்ணி - அறநெறி இது என
முறைப்படி எண்ணி; தீயவர்ச் சேர்க்கிலாது - (துணை சேர்த்துக்
கொள்ள வேண்டுமே என்பதற்காகத்) தீயவர்களைச் சேர்த்துக்
கொள்ளாமல்; செவ்வியோர்ச் சேர்த்து - செம்மையானவர்களையே
துணைவராகச் சேர்த்துக்கொண்டு; செய்தல் - செயல்படுவதே; ஆயது
செய்கை என்பது -
(நான் சொன்னவாறு) துணை சேர்த்துச்
செய்வதாகும்; (அதன்பொருட்டு); உயிர்க்குத் தாயினும் நல்கும் -
உயிர்களுக்குத் தாயைவிட அன்பொடு உதவுகின்ற; சவரியைத்
தலைப்பட்டு -
சவரியைச் சந்தித்து; அன்னாள் ஏயது ஓர் நெறியின்
எய்தி -
அவள் ஏவுமாறு ஒரு வழியிலே போய்; இரலையின் குன்றம்
ஏறி... இருசிய முக மலை மீது ஏறி... -
(குளகச் செய்யுள்; பின்வரும்
செய்யுளைக் கொண்டு முடியும்).

     ஆயது - முன் செய்யுளில் குறித்த கருத்தைக் குறிப்பது;
அஃதாவது, துணை நாடிச் செயல்பட வேண்டும் என்பது. துணை
நாடிச் செய்ய வேண்டும் என்று கூறிய கவந்தன் எத்தகைய துணை
நாடுவது என்று இச் செய்யுளாலும் அடுத்த செய்யுளாலும்
தெளிவுறுத்துகின்றான். செய்தல் - தொழிற்பெயர்.                   54

3697.'கதிரவன் சிறுவன் ஆன கனக
     வாள் நிறத்தினானை
எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து,
     அவனின், ஈண்ட,