யெல்லாம்; அழிப்பதற்கு ஒருவன் ஆன அண்ணலும் - அழிப்பதற்கென்றே ஒப்பற்றவனாய் உள்ள சிவபிரான்கூட; ஒழிப்ப அருந் திறல் - அழிப்பதற்கரிய ஆற்றல் கொண்ட; பல் பூத கணத்தொடும் - பல பூதங்களின் கூட்டத்துடன்; உறையும் உண்மை அறிதிர் அன்றே - சேர்ந்திருக்கும் உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் அன்றோ. அண்ணலும் - உயர்வு சிறப்பும்மை. அழிப்பதற்கென்றே தனிப் பெருந்திறனாளனாகிய சிவபிரானே பூதகணங்களின் உதவியைப் பெற்றிருக்கிறான் என்பதை எடுத்துக் காட்டி, இராமலக்குவர்கள் துணை வலி நாட வேண்டும் என்பதைக் கவந்தன் வற்புறுத்துகிறான். 53 3696. | 'ஆயது செய்கை என்பது, அறத்துறை நெறியின் எண்ணி தீயவர்ச் சேர்க்கிலாது, செவ்வியோர்ச் சேர்த்து, செய்தல்; தாயினும் உயிர்க்கு நல்கும் சவரியைத் தலைப்பட்டு, அன்னாள் ஏயது ஓர் நெறியின் எய்தி, இரலையின் குன்றம் ஏறி, |
'அறத்துறை நெறியின் எண்ணி - அறநெறி இது என முறைப்படி எண்ணி; தீயவர்ச் சேர்க்கிலாது - (துணை சேர்த்துக் கொள்ள வேண்டுமே என்பதற்காகத்) தீயவர்களைச் சேர்த்துக் கொள்ளாமல்; செவ்வியோர்ச் சேர்த்து - செம்மையானவர்களையே துணைவராகச் சேர்த்துக்கொண்டு; செய்தல் - செயல்படுவதே; ஆயது செய்கை என்பது - (நான் சொன்னவாறு) துணை சேர்த்துச் செய்வதாகும்; (அதன்பொருட்டு); உயிர்க்குத் தாயினும் நல்கும் - உயிர்களுக்குத் தாயைவிட அன்பொடு உதவுகின்ற; சவரியைத் தலைப்பட்டு - சவரியைச் சந்தித்து; அன்னாள் ஏயது ஓர் நெறியின் எய்தி - அவள் ஏவுமாறு ஒரு வழியிலே போய்; இரலையின் குன்றம் ஏறி... இருசிய முக மலை மீது ஏறி... - (குளகச் செய்யுள்; பின்வரும் செய்யுளைக் கொண்டு முடியும்). ஆயது - முன் செய்யுளில் குறித்த கருத்தைக் குறிப்பது; அஃதாவது, துணை நாடிச் செயல்பட வேண்டும் என்பது. துணை நாடிச் செய்ய வேண்டும் என்று கூறிய கவந்தன் எத்தகைய துணை நாடுவது என்று இச் செய்யுளாலும் அடுத்த செய்யுளாலும் தெளிவுறுத்துகின்றான். செய்தல் - தொழிற்பெயர். 54 3697. | 'கதிரவன் சிறுவன் ஆன கனக வாள் நிறத்தினானை எதிர் எதிர் தழுவி, நட்பின் இனிது அமர்ந்து, அவனின், ஈண்ட, |
|