வணங்கினான் என்க. முனிவர்களும் பொங்கும் அன்பால் ஆசி அருளினர். 'தொழும் தொறும் தொழும்தொறும்' என்ற அடுக்கு, மிகுதிப் பொருளைக் காட்டும். குரிசில் - அரசகுமரன்.பெருமைக்குரியோனுமாம். 9 2640. | இனியது ஓர் சாலை கொண்டு ஏகி, 'இவ் வயின் நனி உறை' என்று, அவற்கு அமைய நல்கி, தாம் தனி இடம் சார்ந்தனர்; தங்கி, மாதவர் அனைவரும் எய்தினர், அல்லல் சொல்லுவான் |
அனைவரும் இனியது ஓர் சாலை கொண்டு ஏகி - அம்முனிவர்கள் எல்லாரும் வசித்தற்கு இனிதாகிய ஒரு பன்னசாலைக்கு இராமன் முதலியோரை அழைத்துச் சென்று; 'இவ்வயின் நனி உறை' என்று - இவ்விடத்தில் நன்றாகத்தங்கியிருப்பீராக என்று சொல்லி; அவற்கு அமைய நல்கி - இராமனுக்கு ஏற்றவற்றைப்பொருந்தும்படி அளித்து; தாம் தனி இடம் சார்ந்தனர் தங்கி மாதவர் - தாம் தத்தம்தனி இடங்களை அடைந்து தங்கியிருந்து அதன் பின் அந்த முனிவர்கள்; அல்லல் சொல்லுவான் எய்தினர் - அரக்கரால் தாம்படும் துன்பங்களைக் கூற (இராமனிடம்) வந்தார்கள். இராமனின் உள்ளத்தில் தங்கள் துன்பத்தை உய்த்துணரும் வகையில் அனைவரும் துன்புற்றவரேஎன அறிவிக்க எய்தினர். நனி உறை என்பதற்குப் பல நாள் தங்குக எனவுமாம். அமையம் நல்கிஎனக் கொண்டு இருப்பிடம் தந்து இளைப்பாறப் பொழுதும் அளித்து எனவும் கொள்ளலாம். அமையம் - ஆறுதல் எனவுமாம். (குறள். 1178) 10 2641. | எய்திய முனிவரை இறைஞ்சி, ஏத்து உவந்து, ஐயனும் இருந்தனன்; 'அருள் என்? என்றலும், 'வையகம் காவலன் மதலை! வந்தது ஓர் வெய்ய வெங் கொடுந் தொழில் விளைவு கேள்' எனா, |
ஐயனும் எய்திய முனிவரை இறைஞ்சி - இராமனும் தன்னிடம் வந்த அம்முனிவர்களை வணங்கி; ஏத்துஉவந்து இருந்தனன் - அவர்களை அன்புடன் துதித்து இருந்தவன் ஆகி; அருள் என் என்றலும் - இப்போது நீங்கள் எனக்குஎன்ன கட்டளை இடுகிறீர்கள் என்று கேட்டதும்; வையகம் |