பக்கம் எண் :

772ஆரணிய காண்டம்

இருவினைப் பயனும் நீங்குதற்கு ஏற்ற தவநிலை பெற்றவளாகிய சவரி;
மெய்ம்மையின் நோக்கி - (இராமலக்குவரை) மெய்யான அன்போடு
பார்த்து; வெய்ய துனை பரித்தேரோன் - வெப்பம் கொண்டதும்
விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டப்பெற்றதுமாகிய தேரினைச்
செலுத்துவோனாகிய கதிரவனின்; மைந்தன் - மகனாகிய சுக்கிரீவன்;
இருந்த - வாழ்ந்து வந்த; அத் துளக்கு இல் குன்றம் - அழிதல்
இல்லாத அந்த ருசியமுகம் என்னும் மலையை (அடைதற்குரிய);
நினைவு அரிது ஆயற்கு ஒத்த - நினைப்பதற்கு அரியதும்
ஆராய்ந்து தெளிந்தால் மட்டுமே தெரியக் கூடியதும் ஆகிய; நெறி
எலாம் -
வழி முழுவதையும்; நினைந்து சொன்னாள் - எண்ணிப்
பார்த்துச் சொன்னாள்.

     அனகன் : குற்றம் இல்லாதவன் நோன்பு : தவம் தவத்தின்
பயன் இருவினைப் பிணி நீங்குதல்;  சவரி அந்த நிலை அடைந்தவள்
என்பதை 'வினை அறு நோன்பினாள்' என்ற தொடர் குறித்தது. இனி
இரலை மலைக்குப் போகும் வழியைத் தெரிவதே இராமலக்குவர்களின்
அவதாரப் பயணத்துக்கு உண்மைப் பயனாகும்; ஆதலின்
'தெமெய்ம்மையின் நோக்கி' என்றார். இதுவரை நோக்கியது தன் நிலை
குறித்தது; இது அவர்கள் அவதாரப் பயணம் குறித்தது. அவ்வழி
நினைவிற்கும் கொடுமையானது; மேலும், ஆராய்ந்து தெளிந்தே
செல்லுதற்கு உரியது; எனவே, நினைவு அரியது என்றும் ஆயற்கு
ஒத்தது என்றும் கூறினார்.

     அறு நோன்பு, துணை பரி வினைத் தொகைகள். துளக்கு -
முதனிலைத் தொழிற்பெயர்.                                     6

3705. வீட்டினுக்கு அமைவது ஆன மெய்ந்நெறி
     வெளியிற்று ஆகக்
காட்டுறும் அறிஞர் என்ன,
     அன்னவள் கழறிற்று எல்லாம்
கேட்டனன் என்ப மன்னோ -
     கேள்வியால் செவிகள் முற்றும்
தோட்டவர் உணர்வின் உண்ணும் அமுதத்தின்
     சுவையாய் நின்றான்.

    கேள்வியால் - வேதங்களால்; செவிகள் முற்றும் தோட்டவர்-
செவிகள் முழுதும் துளைக்கப்பட்ட பெரியோர்கள்; உணர்வின்
உண்ணும் -
தங்கள் ஞானத் தெளிவினால் நுகரும்; அமுதத்தின்
சுவையாய் நின்றான் -
அமுதத்தின் சுவையாக இருக்கின்ற
இராமபிரான்; வீட்டினுக்கு அமைவது ஆன - மோட்சத்தை
அடைவதற்கு உரிய பொருத்தமான; மெய்ந்நெறி வெளியிற்று ஆக -
உண்மையான நெறி வெளிப்படத் தெரியும்படியாக; காட்டுறும்
அறிஞர் என்ன -
புலப்படுத்துகின்ற ஞானாசிரியர்கள் போல;
அன்னவள் கழறிற்று எல்லாம் - அச் சவரி கூறியவற்றையெல்லாம்;
கேட்டனன் - (கூர்ந்து) கேட்டுக் கொண்டான்; என்ப மன்னோ -
என்று சான்றோர் சொல்லுவர்.