பக்கம் எண் :

776ஆரணிய காண்டம்

மிகைப் பாடல்கள்

குறிப்புரை

1. விராதன் வதைப் படலம்

    246 - 250

இந்த ஐந்து பாடல்களையும் பற்றி ஐயரவர்கள் நூலகப் பதிப்பில்
காணப்படும் குறிப்பு : இதன்பின் ('குமரர் நீர் இவண்' எனத்
தொடங்கும் பாடலுக்குப் பின்) ஒரு சுவடியில் ஐந்து அதிகப் பாடல்கள்
உள்ளன. அவை, சந்தர்ப்பமும் பொருளும் பொருத்தமின்றி மாறுபட்டு
இருத்தலால் அவற்றை இங்குக் குறிக்கவில்லை.

     வை.மு.கோ. பதிப்பில் இப்பாடல்களின் சுவடு கூட இல்லை.

246. ஆதியானிடம் அமர்ந்தவளை
     அன்பின் அணையா,
ஏதில் இன்னல் அனசூயையை
     இறைஞ்ச, 'இறையோய்!
வேத கீதம் அவை வெண் கடல்
     வெறிப்பு அரு புவி
ஓது முன் பிறவி ஒண்
     மதி தண்டம் உமிழ்வோய்.

    ஆதியான் - சிவன்; இடம் அமர்ந்தவள் - உமை            3-1

247.'உன்ன அங்கி தர,
     யோகிபெலை யோக சயனன்-
தன்னது அன்ன சரிதத்
     தையல் சமைத்த வினை இன்று
உன்னி, உன்னி மறை உச்ச
     மதி கீத மதுரத்து
உன்னி மாதவி உவந்து
     மன வேகம் உதவி.

    அங்கி - நெருப்பு; யோக சயனன் - திருமால்                3-2