248. | 'பருதியைத் தரும் முன் அத்திரி பதத்து அனுசனைக் கருதி உய்த்திடுதல் காணுதி, கவந்த பெலையோய் சுருதி உய்த்த கலனைப் பொதி சுமந்து கொள்' எனா, தருதல் அங்கு அணைச் சயத்து அரசி சாரும் எனலும். |
பருதி - சூரியன்; அனுசன் - பின் பிறந்தோன் (தம்பி); சுருதி- வேதம். 3-3 249. | பாற்கடல் பணிய பாம்புஅணை பரம் பரமனை ஏற்கை ஏத்தி இவண் எய்துதலின், என்னை எதிர வாற்கலன் பொதி அசைந்தென கரத்தின் அணையா, ஊர்க்க முன், பணி உவந்து அருள் எனப் பெரிது அரோ. |
பரம் பரமன் - மேலுக்கு மேலானவன் 3-4 250. | அன்றது அக் கடல் அளித்து அகல நின்று அளிதுஅரோ; சென்று தக்க பணி சேர் முனி திறத்து எனின்அரோ; வென்று இதற்கு மொழி மேல் இடுதல் வேண்டுதல்அரோ; இன்று இதற்கும் ஓர் எல்லை பொருள் உள்ளுள் உளரோ. |
அளிது - இரங்கத்தக்கது. 3-5 சூழலுக்கு ஒவ்வாதன; சொல் தெளிவு இல்லாதன; பிழை வடிவு கொண்டு குழ(ம்)ப்பும் சொல்லாட்சி கொண்டன. ஐயரவர்கள் நூலகப் பதிப்பின் குறிப்பு மிகவும் பொருத்தம். அடையாளம் காட்டாமலே விட்ட வை.மு.கோ. வின் செயல் மிகமிகப் பொருத்தம். |