பக்கம் எண் :

778ஆரணிய காண்டம்

251-253.

இந்த நான்கு பாடல்களும் முன் வந்த ஐந்து மிகைப் பாடல்களின்
தன்மை உடையனவே. 'சீர், தளை முதலியன பிறழ்ந்தும், பொருள்
விளங்காமல் பதங்கள் சிதைந்தும் காணப்படுகின்றன' என்பது
ஐயரவர்கள் நூலகப் பதிப்பின் விளக்கம். அப்பதிப்பு ஐந்து பாடல்கள்'
என்கிறது; கம்பன் கழகம் நான்கையே அச்சிட்டுள்ளது. வை. மு. கோ.
பதிப்பில் விடப்பட்டவை இவை 4-1, 2, 3, 4

251.யோசனைப் புகுத யோகி முனி
     யோக வரையின்
பாச பத்திர் இடர் பற்று
     அற அகற்று பழையோர்
ஓசை உற்ற பொருள் உற்றன
     எனப் பெரிது உவந்து,
ஆசை உற்றவர் அறிந்தனர்
     அடைந்தனர் அவண்.                  4-1

 

252. ஆதி நான்மறையினாளரை
     அடித்தொழில் புரிந்து
ஏது நீரில் இடை எய்தியது
     நாமம் எனலும்
சோதியோ உள புரந்தர
     துடர்ச்சி மடவார்
        மாதர் மாண்டு அவையின்
     மாயையினில் வஞ்ச நடமே.             4-2

 

253.விண்ணை ஆளிசெய்த மாயையினில்
     மெய் இல் மடவார்
அண்ணல் மாமுனிவன் ஆடும்
     என அப்பி நடமாம்
என்ன உன்னி, அதை
     எய்தினர் இறைஞ்சி, அவனின்
அண்ணு வைகினர் அகன்றனர்
     அசைந்தனன் அரோ.

 

254.ஆடு அரம்பை நீடு அரங்கு-
ஊடு நின்று பாடலால்,
ஊடு வந்து கூட, இக்
கூடு வந்து கூடினேன்.

    ஆடு அரம்பை - நடனமாடும் ரம்பை என்னும் பெயருடைய
தேவசாதிப் பெண்; கூடு - உடம்பு.                             62-1