255. | வலம்செய்து இந்த வான் எலாம் நலிஞ்சு தின்னும் நாம வேல் பொலிஞ்ச வென்றி பூணும் அக் கிலிஞ்சன் மைந்தன் ஆயினேன். |
நலிஞ்சு - நலிந்து, துன்புறுத்தி; நலிஞ்சு, பொலிஞ்ச - போலி (நலிந்து, பொலிந்த); நாம வேல் - அச்சம் தரும் வேல்; கிலிஞ்சன் என்பது ஓர் அரக்கனின் பெயர். 64-1 256. | வெம்பு விற்கை வீர! நீ அம்பரத்து நாதனால், தும்புருத்தன் வாய்மையால், இம்பர் உற்றது ஈதுஅரோ. |
வெம்பு வில் - வெதும்புகின்ற வில்; அம்பரத்து நாதன் - தேவருலகத் தலைவன்; இம்பர் - இவ்வுலகு. 65-1 3. அகத்தியப் படலம் 257. | 'அருந் திறல் உலகு ஒரு மூன்றும் ஆணையின் புரந்திடும் தசமுகத்து ஒருவன், பொன்றிலாப் பெருந் தவம் செய்தவன், பெற்ற மாட்சியால் வருந்தினெம் நெடும் பகல் - வரத! - யாம் எலாம். |
தசமுகத்து ஒருவன் - பத்துத் தலை கொண்ட இராவணன்; பொன்றிலா - அழியாத. 14-1 258. | 'தேவர்கள்தமைத் தினம் துரந்து, மற்று அவர் தேவியர்தமைச் சிறைப்படுத்தி, திக்கு எலாம் கூவிடத் தடிந்து, அவர் செல்வம் கொண்ட போர் மா வலித் தசமுகன் வலத்துக்கு யார் வலார்? |
துரந்து - விரட்டி. 14-2 |