259. | 'அவன் வலி படைத்து, மற்று அரக்கர் யாவரும், சிவன் முதல் மூவரை, தேவர் சித்தரை, புவனியின் முனிவரை, மற்றும் புங்கவர் எவரையும் துரந்தனர் - இறைவ! - இன்னுமே. |
புங்கவர் - உயர்ந்தோர். 14-3 260. | 'ஆயிர கோடி என்று உரைக்கும் அண்டமேல் மேய போர் அரக்கரே மேவல் அல்லதை, தூய சீர் அமரர் என்று உரைக்கும் தொல் கணத்து ஆயவர் எங்ஙன் என்று அறிந்திலோம், ஐயா! |
மேவல் அல்லதை - வாழ்கின்றார்களே யல்லாமல் (ஆயிரங் கோடி அண்டங்களிலும் பொருந்தினவர்கள் அரக்கர்களே தவிர அமரர் முதலியோர்க்கு இடம் இல்லை). 14-4 261. | "வெள்ளியங் கிரியிடை விமலன் மேலை நாள், கள்ளிய அரக்கரைக் கடிகிலேன்" எனா, ஒள்ளிய வரம் அவர்க்கு உதவினான்; கடற் பள்ளி கொள்பவன் பொருது இளைத்த பான்மையான். |
வெள்ளியங்கிரி - கயிலை மலை; விமலன் - இயல்பாகவே மலங்களின்று நீங்கியவன்; கடற் பள்ளி கொள்பவன் - திருமால்.14-5 262. | 'நான் முகன் அவர்க்கு நல் மொழிகள் பேசியே |
|