| தான் உறு செய் வினைத்தலையில் நிற்கின்றான்; வானில் வெஞ்சுடர் முதல் வயங்கு கோள் எலாம் மேன்மை இல் அருஞ் சிறைப்பட்டு மீண்டுளார்.' |
வினைத்தலை - வினைப் பயனிலே. 14-6 263. | என்று, பினும், மா தவன் எடுத்து இனிது உரைப்பான்: 'அன்று, அமரர் நாதனை அருஞ் சிறையில் வைத்தே வென்றி தரு வேல் தச முகப் பதகன் ஆதி வன் திறல் அரக்கர் வலிமைக்கு நிகர் யாரே! |
தச முகப் பதகன் - இராவணனாகிய பாதகன். 53-1 264. | 'ஆயவர்கள் தங்கள் குலம் வேர்அற மலைந்தே, தூய தவ வாணரொடு தொல் அமரர்தம்மை நீ தனி புரந்திடுதல் நின் கடனது' என்றான்; நாயகனும், 'நன்று!' என அவற்கு நவில்கின்றான்: |
ஆயவர்கள் தங்கள் - அரக்கர்களாகிய அவர்கள். 53-2 4. சடாயு காண் படலம் 265. | 'தக்கன் நனி வயிற்றுஉதித்தார் ஐம்பதின்மர் தடங் கொங்கைத் தையலாருள், தொக்க பதின்மூவரை அக் காசிபனும் புணர்ந்தனன்; அத்தோகைமாருள், மிக்க அதிதிப் பெயராள் முப்பத்து முக் கோடி விண்ணோர் ஈன்றாள்; |
|