| மைக் கருங் கண் திதி என்பாள் அதின் இரட்டி அசுரர்தமை வயிறு வாய்த்தாள். |
ஐம்பதின்மர் - ஐம்பது பேர்; விண்ணோர் - தேவர்கள்; இரட்டி - இரண்டு மடங்கு. 24-1 266. | தானவரே முதலோரைத் தனு பயந்தாள்; மதி என்பாள் மனிதர்தம்மோடு- ஆன வருணங்கள் அவயவத்து அடைவே பயந்தனளால்; சுரபி என்பாள் தேனுவுடன் கந்தருவம் மற்று உள்ள பிற பயந்தாள்; தெரிக்குங்காலை, மானமுடைக் குரோதவசை கழுதை, மரை, ஒட்டை, பிற, வயிறு வாய்த்தாள். |
தானவர் - அரக்கர்; வயிறு வாய்த்தாள் - கர்ப்பம் உற்றாள். 24-2 267. | மழை புரை பூங் குழல் விநதை, வான், இடி, மின், அருணனுடன் வயிநதேயன், தழை புரையும் சிறைக் கூகை, பாறு முதல் பெரும் பறவைதம்மை ஈன்றாள்; இழை புரையும் தாம்பிரை ஊர்க்குருவி, சிவல், காடை, பல பிறவும் ஈன்றாள்; கழைஎனும் அக்கொடிபயந்தாள், கொடியுடனே செடி முதலாக் கண்ட எல்லாம். |
மழை புரை பூங்குழல் - மேகம் போன்ற பொலிவு பெற்ற கூந்தல்; கூகை - ஆந்தை; இழை புரையும் தாம்பிரை - (மகளிர்க்கு) ஆபரணம் போன்ற தாம்பிரை என்னும் பெயருடையால். 24-3 268. | வெருட்டி எழும் கண பணப்பை வியாளம் எலாம் கத்துரு ஆம் மின்னும் ஈன்றாள்; மருள் திகழும் ஒரு தலைய புயங்கம் எலாம் கதை என்னும் மாது தந்தாள்; அருட்டை என்னும் வல்லி தந்தாள், ஓந்தி, உடும்பு, அணில்கள் முதலான எல்லாம்; தெருட்டிடும் மாது இளை ஈந்தாள், செலசரம் ஆகிய பலவும், தெரிக்குங்காலை. |
|