கண பணப் பை வியாளம் - கூட்டமாயுள்ள படமும் நச்சுப்பையும் கொண்ட பாம்புகள் (பல தலைகள் கொண்ட பாம்புகளைக் குறித்தது); மருள் - அச்சம்; புயங்கம் - பாம்பு; செலசரம் - நீரில் இயங்கும் உயிரினங்கள்.24-4 269. | 'அதிதி, திதி, தனு, அருட்டை, சுதை, கழையே, சுரபி, அணி விநதை, ஆன்ற மதி, இளை, கத்துருவுடனே, குரோதவசை, தாம்பிரை, ஆம் மட நலார்கள், விதிமுறையே, இவைஅனைத்தும் பயந்தனர்கள்; விநதை சுதன் அருணன் மென்தோள், புது மதி சேர் நுதல், அரம்பைதனைப் புணர, உதித்தனம் யாம், புவனிமீதே. |
புது மதி சேர் நுதல் - (அமாவாசைக்குப் பின்) புதிதாகத் தோன்றும் (பிறைச்) சந்திரன் போன்ற நெற்றி. 24-5 270. | என்று உரைத்த எருவை அரசனைத் துன்று தாரவர் நோக்கித் தொழுது, கண் ஒன்றும் முத்தம் முறை முறையாய் உக- நின்று, மற்று இன்ன நீர்மை நிகழ்த்தினார். |
எருவை அரசன் - பருந்துகளுக்கு அரசனாகிய சடாயு; துன்று தாரவர் - நெருங்கத் தொடுத்த மாலை அணிந்த இராமலக்குவர்கள்; முத்தம் - முத்துப் (போன்ற). 27-1 5. சூர்ப்பணகைப் படலம் 271. | கண்டு தன்இரு வழி களிப்ப, கா....கத்து எண் தரும் புளகிதம் எழுப்ப, ஏதிலாள் கொண்ட தீவினைத் திறக் குறிப்பை ஓர்கிலாள் அண்டர் நாதனை, 'இவன் ஆர்?' என்று உன்னுவாள். |
|