பக்கம் எண் :

784ஆரணிய காண்டம்

     எண்தரும் புளகிதம் - எண்ணத்தக்க புளகம் (மெய்ச் சிலிர்ப்பு);
அண்டர் நாதன் - தேவர்க்குத் தலைவனாகிய இராமபிரான்; ஓர்
கிலாள் -
குறிப்பாக உணராதவளாய்.                              11-1

272.பொன்னொடு மணிக் கலை
     சிலம்பொடு புலம்ப,
மின்னொடு மணிக்கலைகள்
     விம்மி இடை நோவ,
துன்னு குழல் வன் -
     கவரி தோகை பணிமாற,
அன்னம் என, அல்ல
     என, ஆம் என, நடந்தாள்.

    பொன்னொடு மணிக் கலை - பொன்னும் மணியும் சேர்த்துச்
செய்யப்பட்ட மணிமேகலாபரணம்; புலம்ப - ஒலிக்க.     33-1

6. கரன் வதைப் படலம்

273.ஆற்றேன் ஆற்றேன், அது கெட்டேன்;
     அறுத்தான் அறுத்தான் என் மூக்கை;
கூற்றே கூற்றே என் உடலை,
     குலையும் குலையும்; அது கண்டீர்;
காற்றே தீயே எனத் திரியும்
     கரனே! கரனுக்கு இளையோரே!
தோற்றேன் தோற்றேன்; வல்லபங்கள்
     எல்லா வகையும் தோற்றேனே.

    ஆற்றேன் - தாங்க மாட்டேன்; வல்லபங்கள் - வெற்றிகள்.  7-1

274.பத்துடன் ஆறு எனப்
     பகுத்த ஆயிரம்
வித்தக வரத்தர்கள்
     வீர வேள்வியில்
முத் தலைக் குரிசிலுக்கு
    அன்று முக்கணான்
அத்துணைப் படைத்து
     அவன் அருள உற்றுளார்.

    வித்தக வரத்தர் - சதுரப்பாடு விளங்கும் வரம் பெற்றவர்கள்;
முத்தலைக் குரிசில் - திரிசிரா என்னும் அரக்கர் தலைவன்.   35-1