பக்கம் எண் :

மிகைப் பாடல்கள் 785

275.ஆறு நூறாயிரம் கோடி
     ஆழித் தேர்,
கூறிய அவற்றினுக்கு
     இரட்டி குஞ்சரம்,
ஏறிய பரி அவற்று இரட்டி,
     வெள்ளம் நூறு
ஈறு இல் ஆள், கரன்
     படைத் தொகுதி என்பரால்.

    ஆழித் தேர் - சக்கரம் கொண்ட தேர்கள்; குஞ்சரம் -யானை. 38-1

276. நடந்து தன் இரு கரத்தினின்
     நலம் பெறும் சிலைவாய்
தொடர்ந்த நாண் ஒலி எழுப்பினன்;
     தொகைப்படும் அண்டம்
இடிந்ததென்ன நின்று அதிர்ந்தது;
     அங்கு இறைவனும் இமைப்பில்
மிடைந்த வெஞ்சரம் மழை விடு
     தாரையின் விதைத்தான்.

    சிலைவாய் - வில்லிலிருந்து.                              148-1

277.விழுந்த வெம் படை தூடணன்
     சிரம் என வெருவுற்று
அழிந்த சிந்தையர் திசை
     திசை ஓடினர் அரக்கர்;
எழுந்த காதலின் இடைவிடாது,
     இமையவர், முனிவர்,
பொழிந்து பூ மழை போற்றினர்;
     இறைவனைப் புகழ்ந்தார்.

    அழிந்த சிந்தையர் - தளர்ந்த மனத்தவராய்; காதல் - அன்பு. 161-1

7. சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம்

278. பரிக்கும் அண்டப் பரப்பு எவைக்கும் தனியரசு
     என்று அரன்கொடுத்த வரத்தின் பான்மை