பக்கம் எண் :

788ஆரணிய காண்டம்

மேவரும் பெரும் பயம்
     பிடித்து, விண்ணவர்
தாவினர், தலைத் தலை
     தாழ்ந்து நிற்கவே.

    ஓவு இலர் - நீங்குதல் இலராய் (ஓய்வு ஒழிச்சல் இல்லாமல்);
ஒழிவு - முடிவு.                                          7-2

285.வியக்கும் முப் புவனமும்
     வெகுண்டு, மேலைநாள்
கயக்கிய கடுந் திறல்
     கருத்துளே கிடந்து,
உயக்கிய பயத்தினர்
     அவுணரோடு மற்று
இயக்கரும் திசை திசை
     இறைஞ்சி நிற்கவே.

    கயக்கிய - கசக்கிய.                                   11-1

286.பெருந் திசை இரிந்திடப்
     பெயர்த்தும் வென்ற நாள்,
பருந் திறல் புயம்
     பிணிப்புண்டு, பாசத்தால்
அருந் தளைப்படும் துயர்
     அதனுக்கு அஞ்சியே,
புரந்தரன் களாஞ்சி கை
     எடுத்துப் போற்றவே.

    களாஞ்சி - காளாஞ்சி, தாம்பூல எச்சில் துப்பும் கலம்.       11-2

287.கடி நகர் அழித்துத்
     தன் காவல் மாற்றிய
கொடியவன் தனக்கு உளம்
     குலைந்து கூசியே,
வடதிசைப் பரப்பினுக்கு
     இறைவன் மா நெதி
இடு திறை அளந்தனன்,
     இரந்து நிற்கவே.