கடிநகர் - காவல் மிக்க நகரம்; மாற்றிய- நீக்கிய; நெதி-நிதி. 15-1 288. | நிகர் அறு புவனம் மூன்று என நிகழ்த்திய தொகையினில் தொகுத்திடும் அண்டச் சூழலில் வகையினைக் குரு முறை மரபின் வஞ்சியாப் புகரவன் விரித்து எடுத்து இயம்பிப் போகவே. |
குருமுறை மரபின் வஞ்சியாப் புகரவன் - குரு நெறி மரபிலிருந்து வஞ்சியாத ஒளி (புகழ்) உடைய சுர குரு. 15-2 289. | மதியினில் கருதும் முன் வந்து வேண்டின எது விதப் பொருள்களும் இமைப்பின் நல்கியே, திதி முதல் அங்கம் அஞ்சுஅவையும் தெற்றென, விதிமுறை பெறத் தனி விளம்பிப்போகவே. |
திதி முதல் அங்கம் அஞ்சு - திதி முதலான ஐந்து அங்கங்கள், பஞ்சாங்கம். 15-3 290. | 'உரிய நும் குலத்து உளேன் ஒருவன் யான்' எனப் பரிவுறும் பழமைகள் எடுத்துப் பன்னியே, விரை மலர் சிதறி, மெய் அன்பு மீக்கொளா, நிருதி அங்கு அடிமுறை காத்து நிற்கவே. |
நிருதி - தென்மேற்குத் திசைக் காவலன். 17-1 |