பக்கம் எண் :

790ஆரணிய காண்டம்

291. என்ற பொழுதில், கடிது
     எழுந்து அலறி, வாய் விட்டு,
அன்று அருகு நின்ற
     பல தேவர் கணம் அஞ்ச,
புன் தொழில் அரக்கர்
     மனதில் புகை எழும்ப,
கன்றிய மனத்தள்
     கழறுற்றிடுவதானாள்.

    கடிது எழுந்து - விரைவாக எழுந்து.                       49-1

292. என்பதை மனக்கொடு
     இடர் ஏறிய கருத்தாள்,
முன்ப! உன் முகத்தின்
     எதிர் பொய் மொழியகில்லேன்;
நின் பதம்; நின் ஆணை
     இது; நீ கருதுவாய் என்று
அன்பின் உரியோர் நிலை
     எடுத்து அறைசெய்கிற்பாள்.

    மனக்கொடு - மனத்தில் கொண்டு (எண்ணி); முன்ப - வலிமை
உடையவனே.                                           51-1

293.'ஈது அவர்கள்தங்கள் செயல்'
     என்று அவள் உரைப்ப,
கோது உறு மனத்து எரி
     பிறந்து, குறை நாளில்
மோது வடவைக் கனல்
     முகந்து, உலகம் எல்லாம்
காதுறு சினததன்
     இதனைக் கழறுகின்றான்.

    காதுறு சினத்தன் - சிதைக்கும் சினம் உடையவனாய்.    57-1

294. இற்று எலாம் அரக்கி ஆங்கே
     எடுத்து அவள் இயம்பக் கேட்ட
கொற்ற வாள் அரக்கன் முன்னே,
     கொண்ட வெங் கோபத் தீயில்